India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தினமும் CM ஸ்டாலின் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், இந்துக்களுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களின் உரிமையை CM ஸ்டாலின் பறிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். 13 அமைச்சர்கள் பெயிலில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆன்மிகத்தை எதிர்த்தவர்களின் நிலை இதுதான் என்றும் சாடியுள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு செல்ல, தென் மாவட்டங்களுக்கு மேலும் 40 ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை (அ) நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால், கடந்த முறை டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த முறை உஷாரா புக் பண்ணிக்கோங்க நண்பர்களே!

‘பாரத் டாக்ஸி’ சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். Profit-Sharing முறையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவையில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் நேரடியாக டிரைவர்களுக்கு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களை காட்டிலும் இதில் கட்டணம் குறைவாக இருக்கும் எனவும், ஜனவரி 1-ல் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதுச்சேரியில் பெரிய கட்சிகள் வியக்கும் அளவுக்கு, ஜோஸ் சார்லஸின் LJK தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு ₹35,000 நிதி உதவியும், குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ₹20,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு ₹50,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2036-ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையத்தை கட்டமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. நிலவில் நீண்டகால ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், ரஷ்யா – சீனா கூட்டு ஆய்வு மையத்தை நிறுவுவதற்கும் தேவைப்படும் மின்சாரத்தை, அங்கு அமைக்கும் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஆய்வில் US-ஐ விட ரஷ்யா பின்தங்கி வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்துக்களாகிய நாம் குறைந்தது 3-4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக MP நவ்நீத் ராணா கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு மௌலானா தனக்கு 4 மனைவிகள், 19 குழந்தைகள் இருப்பதாக ஓப்பனாக பேசினார். அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதன் மூலம் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அப்படியென்றால் இந்துக்களாகிய நாம் ஏன் ஒரே குழந்தையுடன் திருப்தி அடைய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

‘அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. என் சாவுக்கு நான் மட்டுமே பொறுப்பு’. நொய்டாவில் விடுதியில் தங்கி இன்ஜினியரிங் படித்துவந்த ஆகாஷ் தீப்பின் கடைசி வரிகள் இவை. சரியாக படிப்பு வரவில்லை என மன உளைச்சலில் இருந்த அவர், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை இழந்த பெற்றோரை என்ன சொல்லி தேற்றுவது? தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!

உலகில் பெரிய உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இந்த விலங்குகளை நேரில் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். இவ்வளவு பெருசா என அசந்து போய்டுவீங்க. அந்த வகையில், அதிக எடைகொண்ட விலங்கு எதுவென்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த விலங்கை நேரில் பார்த்து இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

விஜய் ஹசாரேவின் தொடக்க நாளான இன்று பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருந்தனர். நட்சத்திர வீரர்களான <<18659415>>ரோஹித்<<>>, விராட் தொடங்கி, இளம் நட்சத்திரங்களான வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், படிக்கல் என 22 பேர் ஒரே நாளில் சதம் அடித்துள்ளனர். இதில் ஒடிசா வீரர் ஸ்வாஸ்டிக் சமல் இரட்டை சதம் அடித்து மிரள வைத்தார். VHT தொடர் முதல் நாளில் இருந்தே அனல் பறக்க தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

<<18649552>>மூத்த தமிழறிஞர் அருகோ<<>>, புற்றுநோய் பாதிப்பால் காலமானார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சீமான் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், வாழ்நாள் முழுவதும் தமிழ் தேசிய அரசியல் போராளியாக திகழ்ந்தவர் அருகோ என்றும் அவரது மறைவு தமிழ் தேசிய அரசியலுக்கு பேரிழப்பு எனவும் சீமான் உருக்கமாக தெரிவித்துள்ளார். அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் அருகோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Sorry, no posts matched your criteria.