India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நகராட்சி நிர்வாகத்துறை <<18140241>>பணி நியமனத்தில்<<>> நடந்த ஊழல் தொடர்பாக, பொறுப்பு DGP வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் போலீஸ் கைகளை கட்டாமல் இருக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் அரசுப்பணி கனவை, தங்கள் கமிஷன் கொள்ளைக்காக திமுக அரசு சிதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் நடந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குரூப் 4 தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள், தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய TNPSC அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்காக முதற்கட்ட தேர்வர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று முதல் நவ.7-ற்குள் ஒருமுறை பதிவு பிரிவில் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். உரிய நேரத்திற்குள் பதிவேற்ற தவறினால், அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) என்ற பெயரில் வாக்காளர்களை நீக்குவதோ, இணைப்பதோ கண்டனத்திற்குரியது எனவும், இதனை தவெக எதிர்ப்பதாகவும் அருண்ராஜ் கூறியுள்ளார். வரும் 4-ம் தேதி முதல் TN உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தொடங்க உள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்த்து வரும் நிலையில், SIR பணிகளுக்கான எதிரணியில் தவெகவும் இணைந்துள்ளது. அதிமுக, பாஜக ஆதரவு தெரிவித்துள்ளன.

சர்வதேச போட்டிகளில் மோசமான ஃபார்ம் காரணமாக திணறி வருவதாக வைக்கப்படும் விமர்சனத்திற்கு இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். தற்போது இந்திய அணிக்காக கடினமாக உழைத்து கொண்டிருப்பதாக கூறிய அவர், தான் இன்னும் ஃபார்மில் இருப்பதாகவே தெரிவித்தார். மேலும், ரன்கள் அதுவாக வரும் ஆனால், அணிக்காக ஒரே இலக்கை நோக்கி நகர்வதே மிக முக்கியம் என கூறி மழுப்பியுள்ளார்.

தென் மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, செங்கை, காஞ்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, குமரி, தென்காசி, தேனி, நெல்லை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாய் இருங்கள்!

பாக்.,ஐ தளமாகக் கொண்டு செயல்படும் JeM பயங்கரவாத அமைப்பு, அதன் மகளிர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக பயங்கரவாதிகளின் குடும்பபெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய வீராங்கணைகளுக்கு பதிலடி கொடுக்க, இந்த பெண் ஜிகாதிகள் உருவாக்கப்படுகின்றனர். JeM-ல் சேரும் பெண்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வர் என அதன் தலைவர் மசூத் அசார் கூறும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.

ஓட்டுக்காக PM மோடி எந்த நாடகத்தையும் நடத்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்குக்காக PM டான்ஸ் கூட ஆடுவார் எனவும், நிதிஷ்குமார் எனும் ரிமோட் கண்ட்ரோலை வைத்து பாஜக பிஹாரை ஆள்வதாகவும் சாடியுள்ளார். மேலும், 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நிதிஷ்குமார் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் துரதிர்ஷ்டம் சேருவதை தவிர்க்க, சூரியன் மறைந்த பிறகு இந்த 5 விஷயங்களை பண்ணக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது ✱நகம் வெட்டக்கூடாது ✱துளசி செடிக்கு நீருற்ற கூடாது ✱பூக்கள், இலைகளை பறிக்கக்கூடாது ✱பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் கொடுக்க கூடாது ✱கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்க கூடாது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

வரும் 5-ம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, விவாதித்து முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்டுவதாக விஜய் தெரிவித்துள்ளார். கள நிலவரம் தவெகவுக்கு சாதகமாக இருப்பதால், அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் எடுக்க வேண்டி உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். *கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது. *தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் *மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் *ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது.
Sorry, no posts matched your criteria.