news

News May 3, 2024

கஞ்சா என்று சாணத்தை விற்றவர்கள் கைது

image

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்கலம் சாலை பகுதியில் வாகன சோதனையின்போது, கஞ்சா பாக்கெட்டுடன் விற்ற இருவர், வாங்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சோதனையில், அது வெறும் மாட்டு சானம் என்று தெரியவந்தது.

News May 3, 2024

அரை சதம் கடந்தார் வெங்கடேஷ்

image

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நிதானமாக ஆடிவரும் கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் கடந்துள்ளார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், பொறுமையாக ஆடிவரும் அவர், ஐபிஎல்லில் தனது 9ஆவது அரை சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது வரை, KKR 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. வெங்கடேஷ் ஐயர் 51*, மனிஷ் பாண்டே 36* ரன்களுடன் ஆடி வருகின்றனர்.

News May 3, 2024

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது

image

தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், நாளை முதல் (மே 4) ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் மே 28ஆம் தேதி வரை நீடிக்க நீடிக்கும் என்பதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.

News May 3, 2024

உங்கள் அறிவுரைகளை மனதில் வைத்திருப்பேன்

image

சொந்த நாட்டிற்காக விளையாட செல்வதால் CSK அணியில் இருந்து விலகியுள்ள முஸ்தஃபிசுர் ரஹ்மான், சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தோனியைப் போன்ற அனுபவம் வாய்ந்த லெஜெண்டுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறிய அவர், தோனியின் அறிவுரைகளை எப்போதும் மனதில் வைத்திருப்பேன் என்றார். மேலும், உங்களை மீண்டும் சந்திக்கவும், சேர்ந்து விளையாடவும் ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

கதை சொல்வதில் மோடி வல்லவர்: கார்கே

image

கதை சொல்வதில் பிரதமர் மோடி வல்லவர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் பிரதமரின் இல்ல நிகழ்ச்சிக்கு அழைப்பில்லாமலேயே சென்று, அவரை கட்டியணைத்தது மோடிதான் என்றும், அப்படியிருக்கையில், ராகுல் காந்தி பிரதமராக வேண்டுமென்று பாகிஸ்தான் விரும்புவதாக மோடி கூறுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

News May 3, 2024

கொல்கத்தா அணி தடுமாற்றம்

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தது. பில் சால்ட் 5 ரன், சுனில் நரேன் 8, ரகுவன்சி 13, ஸ்ரேயஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சற்றுமுன்பு வரை, 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.

News May 3, 2024

அதிக சந்தாதாரர்களை சேர்த்த ஜியோ

image

மார்ச் மாதத்தில் அதிக சந்தாதாரர்களை புதிதாக ஜியோ நிறுவனம் சேர்த்துள்ளது. நாட்டின் முன்னணி
நிறுவனமாக விளங்கும் ஜியோ, மார்ச்சில் மட்டும் 21 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதற்கு அடுத்து அதிகபட்சமாக ஏர்டெல் நிறுவனம் 17 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. அதேநேரத்தில், வோடாஃபோன் நிறுவனம் 6.84 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக TRAI தெரிவித்துள்ளது.

News May 3, 2024

T20WCக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

image

பவல் தலைமையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அணியில், பவல் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப் (துணை கேப்டன்), ரசல், நிக்கோலஸ் பூரன், ரூதர்ஃபோர்ட், ஷெப்பர்ட், சார்லஸ், சேஸ், ஹெட்மயர், ஹோல்டர், ஹோப், அகீல் ஹோசன், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், மோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி கோப்பையைக் கைப்பற்றுமா?

News May 3, 2024

முட்டை விலை தொடர்ந்து உயர்வு

image

கடும் வெயிலின் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதலில் ஒரு முட்டையின் விலை ₹20 காசுகள் உயர்ந்து ₹4.80க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் முட்டை விலை ₹65 காசுகள் உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சில்லரை விற்பனை விலை உயர்ந்து, 1 முட்டை ₹6 – ₹7 வரை விற்பனையாகிறது.

News May 3, 2024

தென்தமிழக கடல்பகுதிகளில் நாளை கடல் கொந்தளிப்பு

image

தென்தமிழக கடல்பகுதிகளில் நாளை கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரித்துள்ளது. கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் நாளை காலை 2.30 மணி முதல் நாளை மறுநாள் இரவு 11.30 மணி வரை பலத்த காற்று வீசுமென்று தெரிவித்துள்ளது. கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரைகளில் படகுகள் மோதி சேதமடையும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!