India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. உ.பி அலிகாரில் மல்யுத்த வீரர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 1954இல் இதே நாளில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் 1 நிமிடம் 34 வினாடிகளில் பிரபல மல்யுத்த வீரர் பாபா பஹல்வானை தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் அமித் ஷா, பாஜக ஹைதராபாத் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.மாதவி லதா மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீது நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதுவரை 39 பேர் பலியான நிலையில், 70 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடைகளில் அதிகாரிகள் சோதனையிடும் போது இருப்பு குறைவாக உள்ள பொருட்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ அரசி குறைவுக்கான அபராதம் ₹25லிருந்து, ₹45ஆகவும், துவரம் பருப்புக்கு ₹75ஆக இருந்த அபராதம் ₹110ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பாமாயில் குறைவுக்கு லிட்டருக்கு ₹75ஆக இருந்த அபராதம் ₹130ஆகவும் உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
‘பத்து தல’ பட வெற்றிக்கு பிறகு, சிம்பு தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு மாதவன் கதை கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கதை மிகவும் பிடித்திருந்ததால், சிம்பு உடனே ஓகே தெரிவித்ததாகவும், மாதவன் திரைக்கதையை எழுதி முடித்ததும் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்குகிறது. இந்த வெயிலில் இருந்து காத்துக்கொள்ள, *அதிகளவில் தண்ணீர் குடியுங்கள் *ஐஸ் தண்ணீரை விட, மண் பானைத் தண்ணீர் நல்லது *எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிருங்கள் *தயிர்சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை சாப்பிடலாம் *காபி, தேநீர் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறையுங்கள்.
இன்று அதிகாலை பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர். காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட அவர், கோவை கொண்டுச் செல்லப்படுகிறார். யார் புகார் அளித்தது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை சற்றுநேரத்தில் காவல்துறை வெளியிடவுள்ளது.
இளையராஜா, தன்னுடைய விடுமுறையை மொரீஷியஸ் நாட்டில் கழித்து வருகிறார். அங்கு அவர் தனியாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தைத் தனது X பக்கத்தில் பகிர்ந்தது, இணையத்தில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் அங்கு சென்றுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுக்கு சாப்பாடு ஊட்டி விடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், யுவனும் மொரீஷியஸ் வந்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக அரசியலில், பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகார் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தனது தந்தை தேவகவுடா மற்றும் தாயார் சென்னம்மா ஆகியோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். பாலியல் விவகாரத்தில் ரேவண்ணா குடும்பத்தார் பாவச் செயல் செய்வதாகக் குற்றம்சாட்டிய முதல்வர் சித்தராமையாவுக்கு பதில் அளித்த அவர், முதல்வருக்கு மனிதாபிமானம் இல்லை எனக் கூறினார்.
இதுவரை நடந்த IPL போட்டிகளில் பேட்டிங் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் பவுலர்கள் கவனம் ஈர்த்தனர். முதலில் பேட்டிங் செய்த KKR அணி, MI பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், வெங்கடேஷ் ஐயரின் நிதானமான ஆட்டத்தால் அந்த அணி 169 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய MI, சூர்யகுமார் (46), டிம் டேவிட் (24) தவிர, மீதமுள்ள 8 விக்கெட்டுகளும் 75 ரன்களுக்கு வீழ்ந்தது.
Sorry, no posts matched your criteria.