India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெங்காய ஏற்றுமதி மீதான தடையை 6 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், அதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு ரூ.41,690ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஏற்காடு மலைப்பாதையில் மே 1இல் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து இபிஎஸ் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா ₹10 லட்சம் வழங்குமாறும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ₹2 லட்சம் அளிக்கவும் வலியுறுத்தினார்.
இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டை வெளியிட்டு நேபாள அரசு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதனை அச்சிடுவதற்கு அந்நாட்டின் பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலளித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, போனி கபூரை காதலித்து திருமணம் செய்த பிறகு, சென்னையில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை வாங்கினார். அவரது மறைவுக்கு பிறகு பூட்டி வைத்திருந்த அந்த பங்களாவை புதுப்பித்து ஹோட்டலாக மாற்றும் ஒப்பந்தத்தை, Airbnb நிறுவனத்திற்கு அளித்துள்ளனர். இந்நிலையில், அந்த பங்களாவில் ரசிகர்கள் ஒரு நாள் இலவசமாக தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் விரைவில் தொடங்கவுள்ளது.
இன்று GT அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம், வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். இதுவரை RCB 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை உத்தரவு பறந்துள்ளது. வெயில் தாக்கத்தை பொருட்படுத்தாமலும், விடுமுறை அளித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர், கல்வியாளர்கள் புகார் கூறிய நிலையில், தனியார் பள்ளி இயக்குநர் இந்த எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுசரிதா மொஹந்தி, தலைமையிடம் இருந்து போதிய நிதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார். அங்கு வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (மே 6) உடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே பிஜூ ஜனதா தளம், பாஜக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மொஹந்தி தற்போது வரை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
சியாச்சின் பனிமலைக்கு வடக்கே ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த சாலையைப் பள்ளத்தாக்கின் (16,333 அடி) மேல் பகுதிவரை சீனா நீட்டித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுமென பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். சியாச்சினில் நீண்ட கால பாதுகாப்பு திட்டங்களில், மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இசை பெரிதா? பாடல் பெரிதா என ஒப்பிடும் வகையில் சமீபத்தில் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கி பேசியிருந்தார். இதற்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கடும் எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில், வைரமுத்து தனது x பதிவில், “குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், மக்கள் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ₹55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ₹53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹52,800க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ₹6,600க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹86.50க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.