news

News May 4, 2024

பகத் சிங் வேடத்தில் நடிக்க மறுத்த அமீர்கான்

image

பாலிவுட் நடிகரான அமீர்கான், தங்கல், த்ரி இடியட்ஸ், கஜினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அமீர்கானை சந்தித்து, “தி லெஜன்ட் ஆப் பகத் சிங்” படத்தில் நடிக்க இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி கேட்டுள்ளார். ஆனால், அதை ஏற்காமல் அவர் நிராகரித்து விட்டார். இதையடுத்தே அந்தப் படத்தில் அஜய் தேவ்கன் நடித்தார். வயது காரணமாக இந்த வாய்ப்பை நிராகரித்தாக அமீர்கான் தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

ஆட்சியமைத்த உடனேயே வேளாண் கடன் தள்ளுபடி

image

I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைத்ததும் முதல் நடவடிக்கையாக வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, வேளாண் கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை மோசடி செய்து விட்டதாகவும், ஆனால், பெரும் தொழிலதிபர்களின் ₹16,000 கோடி கடனை தள்ளுபடி செய்து விட்டதாகவும் விமர்சித்தார்.

News May 4, 2024

பூண்டு விலை உயர்ந்தது

image

வரத்து குறைந்ததால் பூண்டு விலை திடீரென அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 50 லாரிகளில் பூண்டு கொண்டு வரப்படும். இந்நிலையில், தற்போது அங்கு அறுவடை சீசன் என்பதால் வரத்து குறைந்தது. இதனால் கடந்த வாரம் கிலோ ₹150 என்ற அளவில் விற்பனையான பூண்டு தற்போது அதிகரித்துள்ளது. தற்போது, முதல் தர பூண்டு கிலோ ₹250, 2ஆம் தரம் – ₹200, 3ஆம் தரம் -₹170க்கு விற்பனையாகிறது.

News May 4, 2024

காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்

image

ஜம்மு-காஷ்மீரில் விமானப்படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியிருப்பதால் பதற்றம் நிலவுகிறது. பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் பகுதியில் விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு 2 வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது, அந்த வாகனங்களை சுற்றிவளைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், 4 விமானப்படையினர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு பதற்றம் நிலவுகிறது.

News May 4, 2024

மஞ்சுமெல் பாய்ஸ் நாளை ஓடிடியில் வெளியாகிறது

image

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம், கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்று அதிக வசூலைக் குவித்தது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் (ரூ.235 கோடி) குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது. இப்படம் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக உள்ளது.

News May 4, 2024

பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைப்பு

image

நெல்லையில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு கரைசுத்து புதூர் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அவர் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 2 நாள்களுக்கு முன்பு காணாமல் போன ஜெயக்குமார், இன்று எரிந்த நிலையில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் மீட்கப்பட்டார்.

News May 4, 2024

IPL: குஜராத் அணி தடுமாற்றம்

image

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் விருத்திமான் சாஹா ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் 2 பேரின் விக்கெட்டுகளையும் முகம்மது சிராஜ் சாய்த்தார். இதையடுத்து சாய் சுதர்சனை 6 ரன்னில் க்ரீன் அவுட்டாக்கினார். சற்று முன்பு வரை குஜராத் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்தது.

News May 4, 2024

ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது

image

கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள் மீது 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

News May 4, 2024

ராகவா லாரன்ஸுக்கு ரஜினி வாழ்த்து

image

ஏழை மக்களுக்கு உதவும் லாரன்ஸின் பணி சிறக்க வேண்டும் என ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல ஆயிரம் மக்களுக்கு உதவும் வகையில் புதிய அமைப்பை தொடங்கிய லாரன்ஸை வாழ்த்துவதாக தெரிவித்த அவர், இறைவனின் ஆசி அவருக்கு எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த மே 1இல், ‘மாற்றம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கிய லாரன்ஸ் ஏழைகள், மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவ உள்ளதாக தெரிவித்திருந்தார்.

News May 4, 2024

பைடனுக்கு பதிலடி கொடுத்த ஜெய்சங்கர்

image

இந்தியாவில் அந்நியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளதாகக் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்தியா எப்போதுமே உலகின் பல்வேறு சமூகங்களை திறந்த மனதுடன் வரவேற்றிருக்கிறது. சிஏஏ சட்டம் மூலம் சிக்கலில் உள்ள மக்களுக்கு எங்கள் கதவு திறக்கப்பட்டுள்ளது. அந்நியர்களை நாங்கள் ஒருபோதும் வெறுப்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!