India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரியாபட்டி அருகே ஆவியூரில் வெடிவிபத்து ஏற்பட்ட கல் குவாரியில் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே 1ஆம் தேதி இந்த கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு நடந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்டதை விட ஆழமாகத் தோண்டியது
கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
* வணிகர் தினத்தையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
* நெல்லை கிழக்கு மாவட்டச் காங்., செயலாளர் ஜெயக்குமார் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
* ஐபிஎல்லில் இன்று பிற்பகல் 3:30மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.
ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடுகின்றன. இரண்டு போட்டிகளிலும் எந்தெந்த அணிகள் வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.
தாம்பரம் அருகே ரயிலில் ₹4கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் பணியாளர் ஜெய்ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். ஏற்கெனவே 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
▶மே – 5, சித்திரை – 22 ▶கிழமை – ஞாயிறு ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM, 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை நேரம்: 3:00 PM – 4:30 PM ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: துவாதசி
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாக தளர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11;30 முதல் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அபாய பகுதியில் இருந்து மக்கள் விலகியிருக்க எச்சரித்துள்ளது.
டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த 14ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆர்சிபி கேப்டன் டு ப்ளெசிஸ். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் எடுத்த அவர் இந்த பெருமையைப் பெற்றுள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (14,562) உள்ளார். அதைத் தொடர்ந்து மாலிக் (13,360), பொல்லார்ட் (12,900), கோலி (14,536), அலெக்ஸ் ஹேல்ஸ் (12,319), வார்னர் (14,232), ரோஹித் (11,482) ஆகியோர் உள்ளனர்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா, அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் சேர்த்துள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியாகும் ஊடக செய்திகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த செய்திக்கு பதிலடி கொடுத்துள்ள உக்ரைன், புதினுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்த சந்தேகத்தில் கைது செய்வதற்கான வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
* தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
* நீ செல்லும் பாதியில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே அல்ல. பிறர் சென்ற பாதை!
* தயங்குபவர் கை தட்டுகிறார்..
துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்.
* விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் ஒருபோதும் உறங்குவது இல்லை.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன்-2’. இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாக இருப்பதால், படத்தின் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காகத் ரிலீஸை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
Sorry, no posts matched your criteria.