India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் & தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக அறியப்படுபவர் ரெஜினா கஸான்ட்ரா. நடிப்புடன் சாகச விளையாட்டான கடலில் சர்ஃப்பிங் செய்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். காதல் மீதான அவரது ஈர்ப்பு, நாளடைவில் கடல்வாழ் உயிரினங்கள் மீதான காதலாக மாறி, பிளாஸ்டிக் இல்லாத பெருங்கடலை உருவாக்க அனிஷ் (12) என்ற சிறுவன் வழிநடத்தும் சப் மெரினா கிளப்புடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொது மக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பகல் 11 மணி முதல் 3 மணி வரை மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்த வேண்டும், வெளியே குடை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 10 நாட்களுக்கு முன் புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருந்த RCB, தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இதேபோன்று, அடுத்து வரவிருக்கும் 3 போட்டிகளிலும் RCB வெற்றி பெற்றால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். Ee saala cup Namde கனவு பலிக்குமா?
கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் பயணிகளை ஹோட்டலில் தங்க அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இ-பாஸ் முறை தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் பயணிகளுக்கு உணவு வழங்க மாட்டோம் என்றனர். மேலும், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகத்தின் மையமாகவும், முதன்மை பிதுர்காரகனாகவும் இருப்பவர் சூரியன். பூர்வீக சொத்துக்களில் பிரச்னை & வில்லங்கங்கள் ஏற்பட்டால், அதனை சூரிய தோஷம் என அழைப்பர். இந்த தோஷத்தால் மனம் வாடுவோர், விரதமிருந்து கோயிலுக்கு சென்று சூரியத்தேவருக்கு அபிஷேகம் செய்து, சிவப்புப்பூவால் அர்ச்சித்து, சூரியக்கவசம் பாடி, சர்க்கரை பொங்கல் படைத்து, வணங்கினால் அத்தோஷ பாதிப்புகள் என்பது ஐதீகம்.
சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில், தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செமீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செமீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6 செமீ, ஏற்காட்டில் 1.2 செமீ, வேலூரில் 1.1 செமீ மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல், சேலம், போச்சம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.
ஐபிஎல்லில் 11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட RCB வீரர் மேக்ஸ்வெல் ஒரு போட்டியில் கூட ஆடாததால் ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடப்புத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் அவர் 0(vs CSK), 3(vs PBKS), 28(vs KKR), 0(vs LSG), 1(vs RR), 0(vs MI), 4(vs GT) என சொற்ப ரன்களே எடுத்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (மே 7) நடைபெற உள்ளது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், பிஹார், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
வணிகர் தினத்தையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இதில் வணிகர் சங்கங்களை சார்ந்த லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பதால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக மையங்களும் இன்று மூடப்பட்டிருக்கும்.
Sorry, no posts matched your criteria.