India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யில் இருந்து ‘நாஞ்சில் விஜயன்’ விலகியதாக அவரே அறிவித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது சீசனில் இருந்து ஏற்கெனவே வெங்கடேஷ் பட் உள்ளிட்டவர்கள் விலகி சன் டிவிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் தற்போது விலகுவதாக அறிவித்திருக்கும் நாஞ்சில் விஜயன், விஜய் டிவிக்கும் எனக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான மானியம், சார்ஜிங் மையம் இருக்கும் இடங்கள் உள்ளிட்ட விபரங்களை செல்ஃபோன் செயலி வழியே இனி அறியலாம். இந்தச் செயலியை தமிழக அரசு ஜூன் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. அதில், மத்திய – மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள், மானிய உதவி, வாகன டீலர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதில் கிடைக்கும். இந்திய அளவில், மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையை வெட்டிக் கொன்ற செவிலியர் சிறையில் அடைக்கப்பட்டார். வயிற்றில் இருந்து பெண் குழந்தை வெளியே வந்ததால் அதன் காலை வெட்டி கழிவுநீர் தொட்டியில் வீசியுள்ளார் அந்த செவிலியர். குழந்தையின் காலை வெட்டும்போது செவிலியருக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், 1. முழுக் கைகளுடன் கூடிய ஆடைகள் அணியக்கூடாது. அரைக் கை சட்டையே அணிய வேண்டும் 2. ஹீல்ஸ் இல்லாத செருப்புகள், ஷூக்கள் மட்டுமே அணிய வேண்டும் 3. பர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை 4. வாட்ச், வளையல், கேமரா, ஆபரணங்கள், உலோக பொருட்களுக்கு அனுமதி இல்லை 5. மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள், பிற பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
மயங்க் யாதவ் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். “மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் காயம் தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது” என்றார். ஐபிஎல் தொடரில் லக்னோ பங்கேற்ற முதலிரண்டு போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறவுள்ளதால் தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 1351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். தேர்வுக்கு மாணவர்கள், 1. நீட் யுஜி அட்மிட் கார்டு 2. தேர்வு மைய விவரங்கள் 3. பயோடேட்டா 4. உறுதிமொழி படிவம் 5. அஞ்சலட்டை அளவு புகைப்படம் 6. ஆதார் உள்ளிட்ட புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இதில், 5 விமானப்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மலையாள திரையுலகையே புரட்டிப் போட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வெறும் ₹20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், பாக்ஸ்-ஆபீசில் ₹230 கோடி வசூல் செய்தது. கொடைக்கானல் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் தமிழ்நாட்டிலும் வரவேற்பு அதிகம் இருந்தது. ஆகையால் 74 நாட்களுக்கு பின்னர் இப்படத்தை படக்குழுவினர் Hotstar ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, இன்று தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை நடைபெறும் இத்தேர்வை தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வர்கள் 1:30க்குள் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
Sorry, no posts matched your criteria.