India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிந்து இன்று காலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சிறிது நேரத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பாகிஸ்தானை தவிர்ப்பதாக நினைத்து, 2025 சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணித்தால், அது இந்தியாவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஐசிசி தொடர்களில் விளையாட மாட்டோம் என்று இந்திய அணி மறுப்பு தெரிவிக்க முடியாது. ஒருவேளை அரசு விளையாடக் கூடாது என நிர்பந்தித்தால், அந்தக் காரணத்தையே தெரிவிக்கலாம்” எனக் கூறினார்.
கடந்த மார்ச் மாதத்தில், இந்திய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 119.9 கோடியாக அதிகரித்துள்ளதாக TRAI தகவல் தெரிவித்துள்ளது. அதன் புள்ளிவிவரங்களின்படி, தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.13% ஆக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 48.11 கோடி, ஏா்டெல் 27.32 கோடி, வோடஃபோன் ஐடியா 12.77 கோடி, BSNL 2.47 கோடி & ஏட்ரியா கன்வர்ஜென்ஸ் 22.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விநாயக் வைத்தியநாதன் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள இப்படம் மே 10ஆம் தேதி முதல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தப் படத்தில், மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
வேளாண் உற்பத்திப் பொருள்களின் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அவை பூச்சிக்கொல்லியாக மட்டுமல்ல மனித உயிர்க்கொல்லியாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, பூச்சிகளைக் கொல்லும் அதன் வீரியம் உணவுப் பொருள்களிலும் தங்கி, விஷமாக மாறுகிறது. அத்துடன், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு கேன்சர், மரபணுச்சிதைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுகிறது.
மறைந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய மருமகன் ஜெபாவுக்கு என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்., யார் யாரிடம் இருந்து பணம் பெற வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இந்த கடிதத்தை ஜெயக்குமார் எழுதியிருக்கிறார்.
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா என சந்தேகம் நீடித்தது. இந்நிலையில், உடற்கூராய்வு தகவல் மூலம் நடந்தது கொலை என்பது உறுதியாகியுள்ளது.
சர்வதேச களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இகா ஸ்வியாடெக் வென்றுள்ளார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று நடந்த இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், பெலாரசின் அரினா சபலென்காவுடன் போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதினார். ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 7-5, 4-6, 7-6 என்ற புள்ளிக்கணக்கில் அரினாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
திமுக அரசு வாய்ச்சொல் வீரராக இருக்கிறதே தவிர மக்களுக்காக இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். நீட் ரகசியத்தை வெளியிட உதயநிதி முன்வருவாரா? ஒரு கையெழுத்தில் நீட் ரத்து என்ற அந்த ரகசியத்தை எப்போது உடைக்கப் போகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார். அத்துடன், மக்களை ஏமாற்றும் செயலை திமுக தொடர்ந்தால் இன்னும் பல உயிர்களை பலி கொடுக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.
மூலிகை & மசாலா பொருள்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவின் அதிகபட்ச வரம்பை 10 மடங்குவரை அதிகரித்துக்கொள்ள FSSAI ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பொருள்களில் உள்ள எம்.ஆர்.எல்., அளவு, முன்பு கிலோ ஒன்றுக்கு, 0.01 மில்லி கிராமாக இருந்தது. ஆனால் தற்போது, கிலோ ஒன்றுக்கு, 0.1 மில்லி கிராமாக 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.