India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கடிதம் தொடர்பாக விசாரித்து வருவதாக டிஐஜி மூர்த்தி விளக்கமளித்துள்ளார். உடற்கூராய்வு முடிவு வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்று கூறிய அவர், கடிதத்தில் பெயர்கள் உள்ள நபரிடம் விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஜெயக்குமார் மாயம் என புகார் தரும்போதே காவல்துறை, மருமகனுக்கு எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டதாகவும் கூறினார்.
சிலர் 3 லிட்டர், 4 லிட்டர் என்று கணக்கு வைத்து தண்ணீர் குடிப்பது வழக்கம். அது அநாவசியம் என்கிறார் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் நவிநாத். அதேபோல, தாகமே இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்கும் நடைமுறையும் தேவையற்றது என்கிறார். நமது உடலுக்கு எப்போதெல்லாம் தண்ணீர் தேவையோ, அப்போதெல்லாம் அது தாகம் என்னும் சமிஞ்சையை கொடுக்கும். அப்போது மட்டும் தேவையான தண்ணீர் அருந்தினால் போதுமானது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவை தவிர்த்து மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
கர்நாடகா எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள அவரை பாஜக அரசு காப்பாற்ற முயல்வதாக காங். குற்றம்சாட்டி வந்தது. இதுதொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரஜ்வாலின் 3,000 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை வைத்துக்கொண்டு வாக்கு அரசியலுக்காக ஓராண்டு கர்நாடக அரசு காத்திருந்ததாக விமர்சித்துள்ளார்.
ஐபில் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துவந்த பெங்களூரு அணி தற்போது 3 போட்டிகளில் வெற்றிபெற்று தலை தூக்கி இருக்கிறது. இதுகுறித்து பேசியிருக்கும் இந்த அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, “RCB வெண்டிலேட்டரில் இருந்து வெளியே வந்துவிட்டது. ஆனால், இன்னும் ஐசியுவில்தான் உள்ளது. பெங்களூரு பவுலர்கள் அசாத்திய செயலை செய்திருக்கின்றனர்.” என்று கூறியிருக்கிறார். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா RCB?
விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘கழுகு’. அதன் இயக்குநர் சத்யசிவா, ‘ஃப்ரீடம்’ என்ற படத்தை சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் சசிக்குமார், லிஜோ மோல் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இலங்கை சிறப்பு முகாம்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழர்களின் வலியை எடுத்துச்சொல்லும் வகையில், இப்படத்தை அவர், இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோடை வெப்பத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர், ரத்தப் பரிசோதனை ஆகிய வசதிகளுடன் சிறப்பு படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ORS பாக்கெட்டுகள் விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கத்தரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி, சேலம், ஏற்காடு, வால்பாறை, கொடைக்கானல், தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், அதிக வெப்பம் பதிவாகி வரும் கரூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்தரி வெயில்’ என்பது வானிலை ஆய்வு மையத்தினால் வெளியிடப்படும் அறிவிப்பு அல்ல. அது பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு அளவுகோள். சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தின் வழியாக பயணம் செய்யும் சுமார் 25 நாள்கள் அக்னி நட்சத்திரம் என்று ஜோதிடம் கூறுகிறது. மே மாதத்தில் வரும் இந்த நாள்களில்தான் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று நமது முன்னோர்கள் கணித்திருந்தனர்.
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்து 2009ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. விஜய்யின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த வெளியீடு விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக அமையும் என்று ஐங்கரன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. என்ன நண்பா & நண்பீஸ். ரெடியா?
Sorry, no posts matched your criteria.