news

News May 5, 2024

MI நிர்வாகம் இருவருக்கும் ஓய்வு கொடுக்குமா?

image

KKR அணிக்கெதிரான லீக் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் MI அணி பிளே-ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. இனிமேல் விளையாடும் போட்டிகள் பெயரளவிலானவை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் & பும்ராவுக்கு ஓய்வளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருவரும் இடம்பிடித்திருப்பதால், அதற்கு தயாராக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

News May 5, 2024

வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

image

வட உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்றும் இயல்பை விட 2-4°C வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 41-43°C வரை அந்த பகுதிகளில் வெப்பம் பதிவாகும் என்றும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 39-40°C வரை வெயில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

துவண்டுவிட வேண்டாம் மாணவர்களே

image

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் செய்தியுடன் மாணவர்களின் தற்கொலை செய்தியும் வெளியாகிறது. உயிரை விட மதிப்பெண்களே முக்கியம் என்ற மாணவர்களின் நினைப்பே இத்தகைய செயலை செய்யத் தூண்டுகிறது. வாழ்க்கையின் வெற்றி மதிப்பெண்களை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதில்லை மாணவர்களே. அதனை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை எடுத்து சொல்வது அவசியம்.

News May 5, 2024

பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்

image

நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள் வெல்வதே கஷ்டம்” என்று கூறியிருக்கிறார். நாளுக்கு நாள் வரும் செய்திகள் இதனை உறுதிபடுத்துவதாகவும் சசிதரூர் கூறினார்.

News May 5, 2024

இது அவ்வளவு சுலபமல்ல!

image

டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மாறுவது, அவ்வளவு சுலபமல்ல என்று RCB அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். GT அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின் பேசிய அவர், “வெள்ளைப் பந்து போட்டியில். விளையாடும் போது நீங்கள் 110% பங்களிப்பை கொடுக்க வேண்டும். புதிய பந்தை வைத்து பயிற்சி செய்தது இன்று வெற்றிகரமாக செயல்பட உதவியது” என்றார்.

News May 5, 2024

சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு – 2026

image

2026ஆம் ஆண்டை சர்வதேச பெண் விவசாயிகளின் ஆண்டாக அறிவிக்க ஐ. நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து & வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது விவசாயம். அத்தகைய உற்பத்தித் துறையில், பெண் விவசாயிகளின் உழைப்பை அங்கீகரிப்பதுடன், அவர்கள் மீதான ஊதியம் & பாலின பாகுபாடுகளை களையவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் FAO திட்டமிட்டுள்ளது.

News May 5, 2024

தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் அனுமதி

image

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்து மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து, மதிய உணவுக் கூட எடுத்துக்கொள்ளாமல், 1 மணியளவில் தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர்.

News May 5, 2024

தமிழ்நாட்டில் கனமழை பெய்யும்

image

தமிழகத்தில் மே 7 மற்றும் 8ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 8ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

வெயிலுக்கு சென்னையில் இளைஞர் பலி

image

சென்னையில் வெயில் தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூரில் கட்டிட தொழில் செய்துவந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சச்சின் (25) நேற்று வெயிலில் மயங்கி விழுந்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று முற்பகலில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

News May 5, 2024

தோல்வி பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது

image

RCB-க்கு எதிரான 52ஆவது லீக் போட்டியில், தோல்வியடைந்தது வருத்தத்தை அளித்தாலும், அதனை கடந்து சென்றாக வேண்டும் என்று GT அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், சின்னச்சாமி மைதானத்தில் 170 – 180 ரன்கள் வரை அடித்திருந்தால், அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்ற பாடத்தை இந்த தோல்வி எங்களுக்கு கற்றுத் தந்துள்ளது எனக் கூறினார்.

error: Content is protected !!