news

News May 19, 2024

ராக்கெட், செயற்கைக்கோள் என்ன வித்தியாசம்?

image

ராக்கெட் என்பது உந்துசக்தி கொண்ட சாதனம் ஆகும். இது ஏதேனும் ஒரு சாதனத்தை சுமந்து சென்று வான்பகுதி அல்லது விண்ணில் செலுத்தும். ராக்கெட்டில் சில திருத்தம் செய்து ஏவுகணையாகவும் பயன்படுத்தலாம். அதேநேரத்தில், செயற்கைக்கோள் என்பது விண்ணில் சுற்றி வரும் ஒரு சாதனம். இதை பூமி அல்லது வேறு கிரகங்களை சுற்றிவரச் செய்து ஆய்வு நடத்த முடியும். செயற்கைக்கோள் ராக்கெட் மூலமே விண்ணில் செலுத்தப்படுகிறது.

News May 19, 2024

விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்

image

சூரத்தைச் சேர்ந்த மீத்வா சோத்வாடியா என்ற மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். 5 வயதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில் 4 விரல்களையும் இழந்த அவர், விடாமுயற்சியோடு முயன்று சாதனை படைத்துள்ளார். இதற்காக தினசரி 4 மணி நேரம் எழுதவும், படிக்கவும் நேரம் செலவிட்டதாக கூறிய அவர், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

News May 18, 2024

யாருடைய மதிப்பீடும் எனக்கு தேவையில்லை

image

கிரிக்கெட் விளையாடுவதில் யாரின் மதிப்பீடும் தனக்குத் தேவையில்லை என்று கோலி தெரிவித்துள்ளார். தாம் முன்பை விட தற்போது அதிக ரன்களை குவிக்க வேண்டுமென்ற வேட்கையுடன் இருப்பதாகவும், அதனால், டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியுமென்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். சரிவர விளையாட முடியவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டால், உடனே தயங்காமல் ஓய்வு பெற்று விடுவேன் என்றும் கோலி தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

EV பேட்டரி: ஆழ் கடலுக்குள் கனிமங்களைத் தேடும் இந்தியா

image

மின்சார கார் பேட்டரி, சோலார் சாதன தயாரிப்புக்கு பயன்படும் கோபால்ட், நிக்கல், காப்பர், மேங்கனிஸ் கனிமங்களுக்கு, பிரிட்டன், சீனா, நார்வேயையே இந்தியா தற்போது அதிகம் சார்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய இந்திய பெருங்கடலுக்கு அடியே கோபால்ட் உள்பட 380 மில்லியன் டன் கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், சர்வதேச ஆழ்கடல் ஆணையத்திடம் உரிமம் பெற்று 2 இடங்களில் தேடுதல் வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது.

News May 18, 2024

சுந்தர் பிச்சைக்கு பிடித்த இந்திய உணவுகள் எது தெரியுமா?

image

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இந்திய வம்சாவளியினரான சுந்தர் பிச்சை 2015 முதல் இருந்து வருகிறார். அவர் அண்மையில் பிரபல யூடியூப்பருக்கு அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த 3 இந்திய உணவுகள் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார். பெங்களூரு செல்லும் பட்சத்தில் தோசையை விரும்பி சாப்பிடுவேன் என்றும், டெல்லியில் சோலே பாதுரி உணவும், மும்பையில் பாவ் பாஜியும் சாப்பிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

News May 18, 2024

இந்த ராசியினருக்கு இனிமேல் கஷ்ட காலம்

image

குரு பகவான் அண்மையில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இந்த இடப்பெயர்வு தனுசு, துலாம், மீன ராசிகளுக்கு தீமையாக அமையும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் போது, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

News May 18, 2024

ஜப்பானியர்களிடம் இருந்து இதை கற்க வேண்டும்

image

ஆரோக்கியமான வாழ்விற்கு சில நல்ல பழக்கவழக்கங்கள் அவசியம். இதனை ஜப்பான் மக்கள் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் சில வாழ்க்கை முறைகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். அவை, *அந்தந்த சீசனில் கிடைக்ககூடிய உணவு பொருட்களை உண்ணுதல், *கிரீன் டீ பருகுதல், *உடற்பயிற்சி செய்தல், *தேவையான நீர் பருகுதல், *சரியான நேரத்திற்கு உறங்குவது, *தொடர்ந்து கற்றல் போன்றவை ஆகும்.

News May 18, 2024

அரசு கல்லூரிகளில் சேர நாளை மறுநாளே கடைசி நாள்

image

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், கல்லூரிகளில் சேர நாளை மறுநாள் வரை அவகாசம் உள்ளதால், நாளை அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 18, 2024

பட்டதாரி ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு முடிவு வெளியீடு

image

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட, பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இத்தேர்வுக்கு, 41,485 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 9 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. எழுத்து முறையில் நடைபெற்ற இத்தேர்வில் 40,136 பேர் பங்கேற்றனர். முடிவுகளை <>trb.tn.gov.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News May 18, 2024

CSK அணி ப்ளே-ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

image

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற CSK 219 ரன்கள் என்ற இலக்கை அடைய வேண்டும் அல்லது 201 ரன்கள் எடுத்தாலே போதும். இதை செய்யாத பட்சத்தில், CSK அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை தவறவிடும். அதே சமயம், CSK அணியை 201 ரன்களுக்குள் (18 ரன்கள் வித்தியாசத்தில்) சுருட்டும் பட்சத்தில் RCB அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

error: Content is protected !!