India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவன் கோயில் பிரகாரத்தில் நாயன்மார்கள் சிலை இருப்பதை காண முடியும். பழங்காலத்தில் சிவனை தீவிரமாக வழிபட்டு, அவரடி சேர்ந்தோர் 63 நாயன்மார்கள் எனப்பட்டனர். அவர்களில், சிறுதொண்டர், சுந்தரமூர்த்தி நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், திருநீலகண்டர், திருமூலர், காரைக்கால் அம்மையார், பூசலார், மங்கையர்க்கரசியார், நந்தனார் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
அமானுஷ்யங்களை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் வெற்றி பெற்ற சில திரைப்படங்களை தெரிந்து கொள்வோம். *ஏலியன் * காட்சில்லா *ஜூராசிக் பார்க் *பிரிடேட்டர் *சீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ் * ஜேக் ஜெயின்ட் ஸ்லேயர்* ட்ரிமோர்ஸ் *ஹெல் பாய் *ரேம்பேஜ் *லேக் பிளாசிட் * அனகோண்டா * மம்மி * மான்ஸ்டர் ஹன்டர் * ஸ்வாம்ப் திங் *கிங் காங் *ஏ குயட் பிளேஸ் *தி லார்ட் ஆப் ரிங்ஸ் *இட்*தி ஹாஸ்ட் ஆகியவையாகும்.
நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி (75) வயது மூப்பு காரணமாக காலமானார். 1977இல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1980 காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவருக்கு 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். இந்த நிலையில், மதுரை மேலூரில் வசித்து வந்த மூத்த சகோதரி புஷ்பவதி இன்று காலமானார். இவரது மறைவை அடுத்து நடிகர் ராமராஜனுக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
உ.பி.யில் 3ஆவது கட்ட தேர்தலில் பா.ஜனதா முழுமையாக தோல்வி அடையும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முதல் 2 கட்டங்களில் பாஜகவை மக்கள் கவிழ்த்துள்ளதாக கூறிய அவர், 3ஆவது கட்டத்தில், 7 மைல்களுக்கு பாஜகவை அப்பால் தூக்கி வீசுவார்கள் என்றார். இதுவரை 16 தொகுதிகளுக்கு உ.பி-யில் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், நாளை மறுநாள் 10 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக அங்கு தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த சில போட்டிகளில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வருவதாக அந்த அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். களத்தில் எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக செயல்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்த அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த அந்த அணி, தற்போது முன்னேறி 7ஆவது இடத்தில் உள்ளது.
ஆந்திராவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொள்ளையடித்து விட்டதாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். தனது சகோதரி ஷர்மிளாவை தனக்கு எதிராக சந்திரபாபு நாயுடு திருப்பி விட்டிருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கூட, தன் மீது அவர் குற்றம்சுமத்துவாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
‘கேட் வுமன்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகை ஹாலே பெர்ரி (57) குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதை அடுத்து, எதிர்க்கட்சியினர் 275 மில்லியன் டாலர்களை மாதவிடாய் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்த அவர், மாதவிடாய் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இருந்து இலங்கை அணி வீரர் பதிரனா விலகுவதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் CSK அணிக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், காயம் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் அவர் இலங்கைக்கே செல்ல உள்ளதாக CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்டிரைக் ரேட் தொடர்பான கோலியின் கருத்துக்கு கவாஸ்கர் பதிலளித்துள்ளார். “கோலியின் ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருப்பதை மேம்படுத்த வேண்டும் என்று கூறுவதில் தவறும் இல்லை என்ற அவர், யாரும் எதுவுமே சொல்லக்கூடாது என்பதை ஏற்க முடியாது” என்றார். முன்னதாக, கவாஸ்கரின் விமர்சனத்துக்கு பதிலளித்த கோலி, “ஆடுகளத்திற்கு வெளியே யாரும் எந்த கருத்தும் சொல்லலாம். ஆனால், மைதானத்தில் செயல்படுவது என்பது வேறானது” என்றார்.
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். வழக்கமாக அமேதியில் போட்டியிடும் ராகுல், இந்த முறை அங்கு போட்டியிடாமல் ரேபரேலியில் போட்டியிடுகிறார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கார்கே, ரேபரேலி மக்கள் விரும்புவதால் ராகுல் போட்டியிடுவதாகவும், லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.