India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 8.50 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனியில் இடியுடன் மிதமான மழையும், ஈரோடு, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கோடை சீசனில் ஓட்டல்கள், கடைகளை திறக்க மாட்டோம் எனக் கொடைக்கானல் வணிகர்கள் எச்சரித்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறியுள்ள வணிகர்கள், உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, தங்குமிடம் எதுவும் தர மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
3ஆவது கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த அவர், தேர்தல் நடைபெற உள்ள 14 தொகுதிகளில் 10 இடங்களில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்றார். மேலும் பேசிய அவர், முதல்கட்ட தேர்தல் நடந்த 14 தொகுதிகளில் 8-9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கால்பந்து உலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 66ஆவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சவுதி ப்ரோ லீக் தொடரில், அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், அல் வேடா அணிக்கு எதிரான லீக் போட்டியில், அல் நாசர் அணி 0-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு ரொனால்டோ வித்திட்டார்.
பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் தோனி 9ஆவது வீரராக களமிறங்கி ஏமாற்றமளித்தார். 5 அல்லது 6ஆவதாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9ஆவதாக தோனி களமிறங்கினார். மேலும் படேல் ஓவரில் தாம் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகி அவர் பெவிலியன் திரும்பினார். முன்னணி வீரர்கள் சொதப்பியதால் தோனி இன்று கலக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.
மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மத்திய பாஜக அரசின் மேற்பார்வையில் உள்ளதால், ரத்து செய்வதில் அதிக கால தாமதம் ஆவதாக கூறிய அவர், I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்ததும் அதற்கான நடைமுறை தொடங்கும் என்றார். தமிழ்நாடு அரசை பொறுத்த வரையில் ஒரு நுழைவுத் தேர்வு போதும் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
‘மக்கள் போராளி அமீர்’ என்ற தலைப்பில் தான் எழுதும் புத்தகம் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குநர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார். மதுரையில் பாட்ஷாவாகவும், சென்னையில் மாணிக்கமாகவும்
இருந்த அமீரை, தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டதாக வருத்தப்பட்ட அவர், தமிழ் சமூகத்திற்காக போராடி சிறை சென்ற அவரை, காலம் நினைவில் கொள்ளும் என்றார். அமீரை ஹுரோவாக வைத்து ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தை அவர் தயாரித்துள்ளார்.
ஐபிஎல்லில் PBKS அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த போதிலும் ரவீந்திர ஜடேஜா ஒற்றை ஆளாய் 43 ரன்களை விளாசினார். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை சென்னை அணி குவித்தது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இளநிலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ₹48, பதிவுக் கட்டணம் ₹2. SC, ST மாணவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.
Sorry, no posts matched your criteria.