India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மாநிலங்கள் இடையே மோதலைத் தூண்ட பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் – ஸ்டாலின்
*காங்கிரஸ் – ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன – மோடி
*பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்? – சீமான்
*மெர்கட்டார் பெட்ரோலியம் நிறுவனத்தை ₹148 கோடிக்கு ஐ.ஓ.சி நிறுவனம் கையகப்படுத்தியது.
*CSK அணிக்கு எதிரான லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
CSK அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து போராடி தோற்றது. ரஹானே, சான்ட்னர் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு RCB அணி செல்லும் வாய்ப்பை உறுதிசெய்தார்.
இன்று (மே 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ராக்கெட் என்பது உந்துசக்தி கொண்ட சாதனம் ஆகும். இது ஏதேனும் ஒரு சாதனத்தை சுமந்து சென்று வான்பகுதி அல்லது விண்ணில் செலுத்தும். ராக்கெட்டில் சில திருத்தம் செய்து ஏவுகணையாகவும் பயன்படுத்தலாம். அதேநேரத்தில், செயற்கைக்கோள் என்பது விண்ணில் சுற்றி வரும் ஒரு சாதனம். இதை பூமி அல்லது வேறு கிரகங்களை சுற்றிவரச் செய்து ஆய்வு நடத்த முடியும். செயற்கைக்கோள் ராக்கெட் மூலமே விண்ணில் செலுத்தப்படுகிறது.
சூரத்தைச் சேர்ந்த மீத்வா சோத்வாடியா என்ற மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். 5 வயதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில் 4 விரல்களையும் இழந்த அவர், விடாமுயற்சியோடு முயன்று சாதனை படைத்துள்ளார். இதற்காக தினசரி 4 மணி நேரம் எழுதவும், படிக்கவும் நேரம் செலவிட்டதாக கூறிய அவர், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
கிரிக்கெட் விளையாடுவதில் யாரின் மதிப்பீடும் தனக்குத் தேவையில்லை என்று கோலி தெரிவித்துள்ளார். தாம் முன்பை விட தற்போது அதிக ரன்களை குவிக்க வேண்டுமென்ற வேட்கையுடன் இருப்பதாகவும், அதனால், டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியுமென்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். சரிவர விளையாட முடியவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டால், உடனே தயங்காமல் ஓய்வு பெற்று விடுவேன் என்றும் கோலி தெரிவித்துள்ளார்.
மின்சார கார் பேட்டரி, சோலார் சாதன தயாரிப்புக்கு பயன்படும் கோபால்ட், நிக்கல், காப்பர், மேங்கனிஸ் கனிமங்களுக்கு, பிரிட்டன், சீனா, நார்வேயையே இந்தியா தற்போது அதிகம் சார்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய இந்திய பெருங்கடலுக்கு அடியே கோபால்ட் உள்பட 380 மில்லியன் டன் கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், சர்வதேச ஆழ்கடல் ஆணையத்திடம் உரிமம் பெற்று 2 இடங்களில் தேடுதல் வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இந்திய வம்சாவளியினரான சுந்தர் பிச்சை 2015 முதல் இருந்து வருகிறார். அவர் அண்மையில் பிரபல யூடியூப்பருக்கு அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த 3 இந்திய உணவுகள் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார். பெங்களூரு செல்லும் பட்சத்தில் தோசையை விரும்பி சாப்பிடுவேன் என்றும், டெல்லியில் சோலே பாதுரி உணவும், மும்பையில் பாவ் பாஜியும் சாப்பிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
குரு பகவான் அண்மையில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இந்த இடப்பெயர்வு தனுசு, துலாம், மீன ராசிகளுக்கு தீமையாக அமையும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் போது, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்கு சில நல்ல பழக்கவழக்கங்கள் அவசியம். இதனை ஜப்பான் மக்கள் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் சில வாழ்க்கை முறைகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். அவை, *அந்தந்த சீசனில் கிடைக்ககூடிய உணவு பொருட்களை உண்ணுதல், *கிரீன் டீ பருகுதல், *உடற்பயிற்சி செய்தல், *தேவையான நீர் பருகுதல், *சரியான நேரத்திற்கு உறங்குவது, *தொடர்ந்து கற்றல் போன்றவை ஆகும்.
Sorry, no posts matched your criteria.