India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவை நீக்கிய மத்திய அரசு, சட்டப்பேரவையை கலைத்தது. அதையடுத்து, அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்படும், ஆனால் காலவரையறை தெரிவிக்க இயலாது என்று ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக, ஜடேஜா 43 ரன்கள் விளாசினார். இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே திணறியது. 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ICSE பாடத்திட்டத்தில் 10,12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது. 10, 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு நாளை காலை 11 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது. முடிவு வெளியிடப்பட்டதும், cisce.org, results.cisce.org. இணையதளங்களில் பகிரப்படும் என்று ICSE அறிவித்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் விளையாடுகிறது. 54ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7இல் வெற்றி பெற்றுள்ள KKR அணி புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல, 10இல் 6 போட்டிகளில் வென்ற LSG அணி 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
ஆந்திர டிஜிபியை பணியிட மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர டிஜிபியாக ராஜேந்திரநாத் ரெட்டி உள்ளார். அவரை உடனடியாக பணியிட மாறுதல் செய்யவும், அந்த பதவிக்கு டிஜி நிலையிலான 3 காவல்துறை அதிகாரிகளை பரிந்துரைக்கும்படி, ஆந்திர அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ECன் இந்நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. முதலில் விளையாடிய சென்னை, 167 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய பஞ்சாப், சிஎஸ்கே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. தற்போது, 15 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணியின் வெற்றி பிரகாசமாகியுள்ளது.
மீன்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்தது. இந்நிலையில் நேற்று வரை ₹100, ₹200க்கு விற்பனையான மீன்கள் இன்று ₹200, ₹400 என விலை உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமையான இன்று, கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை 2 மடங்காக உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரிய தம்பியை, ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக பெரிய தம்பி கூறும்போது, “தம்பி ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். தாத்தா நல்லாருக்கீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகாது. பூரண குணமடைந்து வருவீர்கள்” என ஆறுதல் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள், இந்தியாவுடன் சேர விரும்புவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என்ற ராஜ்நாத் சிங், படைபலத்தை கொண்டு அப்பகுதியை இந்தியா பிடிக்காது என்றும், ஆனால், அப்பகுதி மக்களே இந்தியாவோடு சேர விரும்புகின்றனர் என்றும் கூறினார்.
நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி சத்து உள்ளது. ஆண்டி ஆக்ஸிடெண்டான வைட்டமின் சி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக நம் உடலை பாதுகாப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கோடை காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்படுவதோடு பருவகால தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளில் இருந்தும் நம் உடலை பாதுகாக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைக்க நெல்லி உதவுகிறது.
Sorry, no posts matched your criteria.