India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘குட் பேட் அக்லி’ பட ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ரகசியமாக நடந்துவருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு எதிராக இரு எதிர்நிலை கதாபாத்திரங்கள் இருக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக விஜய் சேதுபதி & S.J.சூர்யா ஆகிய இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக விசைப்படகுடன் இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் “வைபவ்’ ரோந்து கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை பதிவு எண் கொண்ட விசைப்படகை கண்ட கடலோர காவல் படை வீரர்கள், அதனை சுற்றிவளைத்து பிடித்து, அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ எண்: 7
▶குறள்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
▶பொருள்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளையொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலைகள் தீருவதற்கு வழி எதுவுமில்லை.
பாஜகவின் தலைக்கனமிக்க தலைவர்களான மோடியும், அமித்ஷாவும் மேற்கு வங்கத்திற்கு எதிரானவர்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். ஹவுராவில் பேசிய அவர், “மக்கள் மீது அன்பு இருப்பதைப் போல காட்டிக்கொள்ள ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதே அவர்களின் செயல்பாடுகளாகும். இது வங்க மக்களுக்கும் தெரியும். 200 இடங்களைக் கூட தாண்டாமல் பாஜக மண்ணைக் கவ்வும்” என கூறினார்.
மெர்கட்டார் பெட்ரோலியம் நிறுவனத்தை நாட்டின் முன்னணி பொதுத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) கையகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் கண்டுபிடிப்பு & தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுவந்த இந்நிறுவனம் கடந்த மாதம் திவாலானது. இதனையடுத்து, அதன் 100% பங்குகளை கையகப்படுத்த விண்ணப்பித்திருந்த ஐ.ஓ.சி நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலைப் பெற்று ₹148 கோடிக்கு வாங்கியுள்ளது.
RCB அணிக்கு எதிரான 68ஆவது போட்டியில், 3 விக்கெட்டுகள் (27 ரன்கள்) வித்தியாசத்தில் தோற்ற CSK அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் CSK களமிறங்கியது. ஜடேஜா – தோனி ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் ஏறியதால், கரைதேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட CSK அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.
இன்று (மே 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜிட்டிக்காக இருக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்த பிறகு இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில், இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் உருவாக்கிய இடஒதுக்கீடு முறையை மத்திய பாஜக அரசு பின்பற்றி வருகிறது. அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. என்.டி.ஏ அரசு அம்பேத்கர் வகுத்த பாதையில் பயணிக்கிறது” எனக் கூறினார்.
ஜெர்மனியில் உள்ள குர்பல்ஸ் காலாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி யராஜி, 13.06 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்றார். தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெர்மனியில் தங்கம் வென்ற அவர், கடந்த வாரம் நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.