India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகள் நாளை மாலை வரை கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக கள்ளக்கடல் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குமரி கோடிமுனை கடற்கரையில் பாறை மீது நின்று வேடிக்கைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த இருவர், ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
பிரஜ்வாலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்நாடக அரசு நிதியுதவி வழங்க உள்ளது. எம்.பி பிரஜ்வால் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவானார். பிரஜ்வாலை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களில் அவர் நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் 6360938947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் <
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் அரை சதம் விளாசினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அரை சதம் கடந்தார். கொல்கத்தா அணி தற்போது வரை 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. லக்னோ தரப்பில் நவீன் உல்-ஹக் மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக நடிகை ஆத்யா பிரசாத் தெரிவித்துள்ளார். தமிழில் மிகவும் பிடித்த நடிகர் சூர்யா எனக் கூறிய அவர், 4 படங்களாவது அவருடன் இணைந்து நடித்துவிட வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார். மலையாளத்தில் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தமிழில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ’13’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், சேலம் மற்றும் கோவையில் இடியுடன் லேசான மழையும் பெய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இடஒதுக்கீட்டை பாஜக எப்போதும் எதிர்ப்பதாகவும், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை ஒழித்து விடுமென்றும் தெரிவித்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. முதலிரண்டு இடத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் முறையே குஜராத் மற்றும் மும்பை அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் ராகுல் காந்தி செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். தெலங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ராகுலுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், 2 பேரும் செல்லவில்லை என்றும், இதற்கு வாக்கு வங்கிதான் காரணமென்றும் கூறினார்.
தான் காந்தி குடும்பத்தின் பணியாளன் இல்லை என அமேதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா தெரிவித்துள்ளார். கட்சி வேட்பாளராக தேர்வு செய்துள்ளதால் அமேதியில் போட்டியிடுவதாக தெரிவித்த அவர், யாரை வேட்பாளராக தலைமை அறிவித்தாலும் பாஜகவை தோற்கடிப்போம் என்றார்.
முன்னதாக, ரேபரேலியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் தினேஷ் பிரதாப், அமேதியில் காங்., தனது ப்யூனை நிறுத்தியுள்ளதாக விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.