India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை மே 31ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முன்கூடியே பருவமழை தொடங்கவுள்ளதாகவும், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
CSK – RCB அணிகளுக்கு இடையேயான போட்டி மழையின் காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் RCB 190 ரன்கள் எடுத்து, CSKவை 172 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். முதலில் பந்து வீசினால் CSKவை 13.1 ஓவரில் வீழ்த்த வேண்டும். 10 ஓவர் போட்டி என்றால், RCB 140 ரன்கள் எடுத்து 122 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். முதலில் பவுலிங் செய்தால் CSKவை 8.1 ஓவரில் சுருட்ட வேண்டும். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
கோடை மழை மின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் போது பொதுமக்கள் யாரும் மின் கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடக்கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக் கூடாது என்றும், மின் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளைக் கட்டுப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே விளம்பர அழைப்புகளுக்கு 160 சீரிஸ் கொண்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, சேவை சார்ந்த அழைப்புகளுக்கு 140 சீரிஸில் தொடங்கும் எண்களை ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஜூன் 24 காலை 10 மணி முதல் 25ம் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹54,800க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹6,850க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹96.50க்கும், கிலோவிற்கு ₹4000 உயர்ந்து ₹96,500க்கும் விற்பனையாகிறது.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செலுத்தியுள்ளதாகவும், 43,199 பேர் முடி காணிக்கை செய்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உணவுப் பொருள்களை பொறிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே பயன்டுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது அதிலுள்ள கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகளாக மாறி இதய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. இவற்றை எப்போதாவது பயன்படுத்தினால் பிரச்னை இல்லை, ஆனால் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தின் VFX பணிகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற லோலா நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில், VFX பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாகவும், அதற்கான அவுட்புட்டை காண ஆர்வமாக இருப்பதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.