India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பும்படியாக, நடப்பு ஆண்டில் வெளியான எந்த படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ‘ப்ளூ ஸ்டார்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் வகையிலான படங்களாக இல்லை. இந்நிலையில், ‘G.O.A.T’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’, ‘இந்தியன் 2’ ஆகிய படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து சுமார் ₹50,000 கோடியை வெளியே எடுத்துள்ளனர். இது, ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இப்படி எடுப்பது வழக்கம் என்று ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர். உண்மையான காரணம் என்னவென்பது முதலீட்டாளர்களுக்கே வெளிச்சம்.
சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான நேற்றைய போட்டியில் Dew Factor காரணமாக பந்து ஈரமாகவே இருந்தது. இதனால், ஃபெர்குசன், தயாள் உள்ளிட்ட பவுலர்களின் கைகளில் இருந்து பந்து நழுவி CSK பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகச் சென்றது. ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி 110 மீ., சிக்ஸர் அடித்ததால் அந்தப் பந்து தொலைந்து போனது. புதிய பந்தினை லாவகமாக பிடித்து எறிந்து யாஷ் தயாள், அணியை வெற்றி பெறச் செய்தார்.
தமிழ்நாட்டிற்கு இன்று முதல் மூன்று நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அருவிகளில் குளிக்க வேண்டாம் எனவும் மக்களின் செல்போன்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குமரி மாவட்டம் பேச்சிபாறை பகுதியில் 10 செ.மீ., மழையும், திருப்பத்தூர் மாவட்டம் வடப்புதுபட்டு மற்றும் ஆம்பூர் பகுதிகளில் 9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மூன்று நாட்களுக்கு அதிகனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி ஒடிசா, மியான்மரை நோக்கி செல்லும். இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாம்பழம் போன்ற பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் தீங்கு விளைவிக்கும் அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது. இவை தலைச்சுற்றல், எரிச்சல், பலவீனம், விழுங்குவதில் சிரமம், வாந்தி மற்றும் தோல் புண்கள் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்நிலையில், கால்சியம் கார்பைடை பயன்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு உணவு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓபிஎஸ்சை எந்த வகையில் ஏற்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், பதவி பறிபோகிறது என்பதால் கட்சிப் பிரிவுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஓபிஎஸ் தான். அவரை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம், நாளொன்றுக்கு 13,700ஆக பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை, இந்த வாரம் 25,900ஆக பதிவாகி வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு தொற்று எண்ணிக்கை உயரும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.