news

News May 6, 2024

இந்தியாவை பார்த்து வியக்கும் உலகநாடுகள்

image

உலகளவில் இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மாறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 1200 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தியர்கள் மேற்கொள்வதாகவும், இதற்கு நேர்மாறாக அமெரிக்கா ஒரு வருடத்தில் 400 கோடி அளவிலே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதாகவும் கூறினார். இதுகுறித்து பல நாடுகள் இந்தியாவுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

News May 6, 2024

திருநாவுக்கரசர் அதிமுகவில் இணைகிறாரா?

image

மக்களவைத் தேர்தலில் சீட் தராமல் புறக்கணிக்கப்பட்டதால் காங்., மீது அதிருப்தியில் இருக்கும் திருச்சி எம்பி திருநாவுக்கரசர், பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவில் இணைந்தால், அவருக்கு “ராஜமரியாதை கிடைக்க நான் பொறுப்பு” என EX மினிஸ்டர் சி.விஜயபாஸ்கர் தூது விட்டுள்ளாராம். இதனால், அதிமுகவில் இணைவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் திருநாவு.

News May 6, 2024

இழந்ததை மீண்டும் தரும் ‘தென்னக அயோத்தி’

image

தமிழகத்தில் ராமரின் புகழ் பாடும் ஆலயங்களுள் முக்கியமானது கும்பகோணம் ‘குடந்தை ராமசாமி’ கோயில். இதுவே,‘தென்னக அயோத்தி’ எனப்படுகிறது. இங்கு வணங்கினால் இழந்த சொத்து, பதவி, செல்வம், சொந்தங்கள் என அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் சிறப்பாக, ஸ்ரீராமரும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தருகின்றனர். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுசேர்தல் போன்ற வரங்களுக்கு ஏற்ற தலம் இதுவாகும்.

News May 6, 2024

தேர்தலுக்காக வீரர்கள் மீது தாக்குதல்: சரண்ஜித் சிங்

image

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதல் அல்ல, தேர்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விமர்சித்துள்ளார். தேர்தல் நடைபெறும் போதெல்லாம் இத்தகைய நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருவதாகக் கூறிய அவர், இந்த தாக்குதலில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

News May 6, 2024

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இன்று முதல் ஜூன் 6 வரை www.tneaonline.org – www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாகவும், மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம், ஓ.சி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ.500, மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250.

News May 6, 2024

PBKS-ஐ பதம் பார்த்த தேஷ்பாண்டே, ஜடேஜா

image

நேற்று நடந்த PBKS அணிக்கு எதிரான போட்டியில் CSK வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் துஷார் தேஷ்பாண்டே. 2ஆவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதன்பின் பந்துவீச வந்த ஜடேஜா, PBKSயின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங், சாம் கரன், அஷூதோஷ் ஷர்மா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் CSK வெற்றி மிகவும் எளிதாக அமைந்துவிட்டது.

News May 6, 2024

ப்ளே ஆஃப்-ஐ நெருங்கிய KKR & RR

image

நடப்பு ஐபிஎல்லில் KKR & RR (16 புள்ளிகளுடன்) ஆகிய இரு அணிகளும் ஏறக்குறைய ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கிவிட்டன. அதேபோல், CSK, SRH, LSG ( 12 புள்ளிகளுடன்) ஆகிய அணிகளுக்கும் ப்ளே ஆஃப் செல்ல அதிக வாய்ப்புள்ளது. 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள MI, இந்த ஐபிஎல்லின் லீக் போட்டியில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப்-க்கு செல்ல 0.0001% தான் வாய்ப்பு இருக்கிறது.

News May 6, 2024

மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பெறலாம்

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானதும், அந்தந்தப் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற தளத்தில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை 9.45 மணி முதல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பள்ளியிலேயே பெறலாம்.

News May 6, 2024

நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து

image

கடந்த ஐந்து மாத காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்த ஆண்டு அக்.14ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், குறைந்த அளவே மக்கள் பயணித்ததன் காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 13 முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.

News May 6, 2024

பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மே 14 ஆம் தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதற்காக 13ஆம் தேதி வாரணாசி செல்லும் அவர், அங்கு பிரம்மாண்ட சாலைப் பேரணியும் நடத்த உள்ளார்.

error: Content is protected !!