India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமீப காலமாக, குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வீடுகளில் செல்லப் பிராணி வளர்ப்பவர்களும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் அவற்றை கவனமாக வளர்ப்பது அவசியமாகிறது. அதேபோல், நாய் தொல்லை அதிகமுள்ள பகுதிகளில், குழந்தைகளை வெளியே தனியாக அனுப்புவதை பெற்றோர் தவிர்ப்பது நல்லது.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாகத் தேர்வு செய்து பரிசுகள் வழங்கினார். இந்நிலையில், நடப்பு ஆண்டிலும் அவர் பரிசுகள் வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் 400மீ தொடர் ஓட்டத்திற்கான இந்திய அணிகளில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். உலக தொடர் ஓட்டப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்ததால், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அதில், ஆடவர் அணியில் தமிழகத்தின் ஆரோக்ய ராஜிவும், மகளிர் அணியில் தமிழகத்தின் சுபா வெங்கடேஷ் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதால், மாணவர்கள் மத்தியில் மேற்படிப்பு குறித்தத் தேடல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், துறையின் எதிர்காலம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டுமென கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். மருத்துவம், பொறியியல் என பொது நீரோடையில் கலக்காமல், கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தினால், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
மணிரத்னம் இயக்கும் கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்னையால் துல்கர் இப்படத்தில் இருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக சிம்பு நடித்து வருகிறார். ஜெயம் ரவியும் விலகியதால், அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியுள்ளன. மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருபவரின் 5 வயது மகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, ராட்வீலர் வகை வளர்ப்பு நாய்கள் சிறுமியை கடித்ததோடு, அவரை மீட்க வந்த தாயையும் கடித்து குதறின. பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்வெட்டை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பல்வேறு மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், மக்கள் அவதிப்படுவதாகவும், நிலுவையில் உள்ள மின் திட்டங்களை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அதிக வெப்ப அலைக்கான ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராயலசீமா, தெலங்கானா, கர்நாடகாவில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகள் 11 போட்டிகளிலும், 2 அணிகள் 10 போட்டிகளிலும் விளையாடியுள்ளன. இதை வைத்து ஒவ்வொரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப்க்கு செல்ல எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது என கிரிக்ட்ராக்கர் இணையம் கணித்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் 99%, கொல்கத்தா 99%, ஹைதராபாத் 60%, சென்னை 51%, லக்னோ 45%, டெல்லி 19%, பஞ்சாப் 15%, பெங்களூர் 10%, குஜராத் 1.9%, மும்பை 0.1% வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா, மே 4ஆம் தேதி தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும், சாய் பாபா புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
Sorry, no posts matched your criteria.