India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு பல மாவட்டங்களில் மாணவர்கள் 90%-க்கும் கீழ் தேர்ச்சியான நிலையில், இம்முறை அனைத்து மாவட்டங்களுமே 90% மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர். 90.47% பெற்று திருவண்ணாமலை மாவட்டம் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. கடந்தாண்டு ராணிப்பேட்டை மாவட்டம் 87.30% பெற்றதே குறைந்த தேர்ச்சி விகிதமாகும்.
* அறிவியல் பாடப்பிரிவுகள் 96.35%
* வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.46%
*கலைப் பிரிவுகள் 85.67%
* தொழிற்பாடப் பிரிவுகள் 85.85%
இயற்பியல் பாடத்தில் 98.48% பேர்
வேதியியல் பாடத்தில் 99.14% பேர்
உயிரியல் பாடத்தில் 99.35% பேர்
கணிதம் பாடத்தில் 98.57% பேர்
தாவரவியல் பாடத்தில் 98.86% பேர்
விலங்கியல் பாடத்தில் 99.04% பேர்
கணினி அறிவியல் பாடத்தில் 99.80% பேர்
வணிகவியல் பாடத்தில் 97.77% பேர்
கணக்குப்பதிவியல் பாடத்தில் 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் 8,03,385 பேர் தேர்வெழுதிய நிலையில், இந்தாண்டு 7,60,606 பேர் தேர்வெழுதினர். கடந்த ஆண்டு 7,55,451 (94.03%) தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 7,19,196 (94.56%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாணவியர் 4,05,753 (96.38%), மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு மாணவியர் 3,93,790 (96.44%), மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதங்கள் பின்வருமாறு:
▶அரசுப் பள்ளிகள் – 91.02%
▶அரசு உதவிப் பெறும் பள்ளிகள் – 95.49%
▶தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.70%
▶இருபாலர் பள்ளிகள் – 94.78%
▶பெண்கள் பள்ளிகள் – 96.39%
▶ஆண்கள் பள்ளிகள் – 88.98%
+2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த பொதுத்தேர்வில் சென்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 26,352 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். அதன்படி, தமிழ் – 35, ஆங்கிலம் – 7, கணிதம் – 2,587, இயற்பியல் – 633, வேதியியல் – 471, உயிரியல் – 652 மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் +2 தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25,305 பேர் (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,08,440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 3,93,890 பேர் (96.44%), மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் (100%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 326 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருந்தன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கும் முயற்சிக்கு இந்த முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளன.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. கடந்த மார்ச் மாதம் நடந்த இத்தேர்வை 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் தேவைப்படும் மாணவர்கள் இன்றே பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்.
மணிப்பூரின் பல பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால், வீடுகளும் சேதமாகியுள்ளன. இந்நிலையில், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவித்துள்ள மாநில அரசு, பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.