India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல் இடத்தை பிடிப்பதற்கு தென் மாவட்டங்கள், கொங்கு மற்றும் வட மாவட்டங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் முதல் இடத்தை திருப்பூர் (97.45%)பிடித்துள்ளது. கொங்கு மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு, தென்மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கை (97.42%) 0.03% குறைவான தேர்ச்சியை பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளன. 3ஆம் இடத்தை வட மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் (97.25%) பிடித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், துணைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+2 தேர்வு முடிவு வெளியான நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் (UG) சேர இன்று முதல் http;//tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹48, பதிவுக்கட்டணம் 2 என மொத்தம் ₹50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST மாணவர்கள் பதிவுக்கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044 -24343106, 24342911 என்ற எண்ணை அழைக்கவும்.
மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான தேர்ச்சி விகித இடைவெளி குறைந்து வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு 96.38% மாணவிகளும், 91.45% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதனால் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 96.44% மாணவிகளும், 92.37% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதால் தேர்ச்சி இடைவெளி 4.07%ஆக குறைந்துள்ளது.
+2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.02%, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 95.40% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 98.70%, பெண்கள் பள்ளிகளில் 96.89%, ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் 88.98%, இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 94.78% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் – பெண்கள் இணைந்து படிக்கும் பள்ளிகளை விட ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.
+2 தேர்வில் கடந்த ஆண்டை போலவே, மூன்றாம் பாலினத்தவர் தேர்ச்சி 100%ஆக உள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். அதேபோல், இந்தாண்டும் ஒரேயொரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதிய நிலையில், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று கவனம் ஈர்த்துள்ளார். 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர் யாரும் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், முக்கிய பாடங்கள் வரிசையில் ‘கணினி அறிவியல் பாடத்தில் 99.80% தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. ▶உயிரியல் 99.35%, ▶வேதியியல் 99.14%, ▶விலங்கியல்-99.04%, ▶தாவரவியல்-98.86%, ▶கணிதம்-98.57%, ▶இயற்பியல்-98.48%, வணிகவியல்-97.77%, கணக்குப்பதிவியல்-96.61% பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
+2 தேர்வில் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 32,501 மாணவர்கள் சென்டம் எடுத்திருந்த நிலையில், இந்தாண்டு 26,352 பேர் சென்டம் எடுத்துள்ளனர். அதன்படி, தாவரவியல் – 90, விலங்கியல் – 382, கணினி அறிவியல் – 6,996, வணிகவியல் – 6,142, கணக்குப்பதிவியல் – 1,647, பொருளியல் – 3,299, கணினிப் பயன்பாடுகள் – 2,251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 210 பேர் சென்டம் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்சமாக 84.70% தேர்ச்சியுடன் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, 85.42% தேர்ச்சியுடன் மயிலாடுதுறை 2வது இடத்திலும், 87.81% தேர்ச்சியுடன் திருவண்ணாமலை 3வது இடத்திலும், 88.30% தேர்ச்சியுடன் கிருஷ்ணகிரி 4வது இடத்திலும், 88.78% தேர்ச்சியுடன் காஞ்சிபுரம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
மயிலாடுதுறை 92.38%
திருப்பத்தூர் 92.34%
ராணிப்பேட்டை 92.28%
காஞ்சி -92.28%
கள்ளக்குறிச்சி 92.19%
கிருஷ்ணகிரி 91.87%
திருவள்ளூர் 91.32%
நாகை 91.19%
தி.மலை 90.47%
Sorry, no posts matched your criteria.