India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மூர்க்க இன நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால், அத்தகைய 23 நாய் இனங்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில், அமெரிக்கன் புல்டாக், பிட்புல் டெரியர், ராட்வீலர், மாஸ்டிப் உள்ளிட்ட நாய் இனங்கள் அடங்கும். இத்தகைய நாய் இனங்கள் பெரும்பாலும் காவலுக்காக வளர்க்கப்படுபவை. இவற்றுக்கு முறையாகப் பயிற்சி அளிக்காவிட்டால், அந்நியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
மணிரத்னம் இயக்கும் கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், கால்ஷீட் பிரச்னையால் இருவரும் விலகினர். இதையடுத்து, துல்கருக்கு பதிலாக சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. எனினும், அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று படத்திலிருந்து சிம்புவின் ப்ரமோ வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், x பக்கத்தில் சிம்பு பெயர் டிரெண்டிங்கில் உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஐசிசி, போட்டிகளை நடத்தும் நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அச்சுறுத்தல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், போட்டிகளை பாதுகாப்புடன் நடத்த தங்களிடம் திட்டமிருப்பதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.
இயக்குநர் மாரி இயக்கும் புதிய படத்திற்கு ‘பைசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடியில் தொடங்க உள்ளதா நிலையில், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் மிளிருமாறு வாழ்த்திய அவர், இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும், அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் தரமான கல்வியை வழங்கினாலும், பெரும்பாலான இந்திய மாணவர்கள் கனடாவில் மேற்படிப்பு படிக்க விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அங்கு 2 வருடப் படிப்பை முடித்த பிறகு 3 வருட வேலை பெறத் தகுதி பெறுவதோடு, நிரந்தரமாக அங்கேயே வசிப்பதற்கும் விண்ணப்பிக்க முடியும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கனடாவில் மாணவர் விசா பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
‘மயோசிடிஸ்’ எனும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று ‘ஸ்பா’ மூலம் சிகிச்சை மேற்கொண்ட அவர், அதுகுறித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ஆனால், ‘ஸ்பா’ படத்திற்கு பதிலாக, அந்தரங்க புகைப்படத்தை பகிர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவருக்கு உடனே தெரியவந்ததும், அந்த புகைப்படத்தை டெலிட் செய்தார்.
ICSE பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது. முடிவுகளை cisce.org, results.cisce.org. ஆகிய இரு இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12இல் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 6 வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூன் 12 ஆகும். தொடர்ந்து, ஜூலை 10இல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் செய்தியுடன் மாணவர்களின் தற்கொலை செய்தியும் வெளியாகிறது. உயிரை விட மதிப்பெண்களே முக்கியம் என்ற மாணவர்களின் நினைப்பே இத்தகைய செயலை செய்யத் தூண்டுகிறது. வாழ்க்கையின் வெற்றி மதிப்பெண்களை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதில்லை மாணவர்களே. அதனை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை எடுத்து சொல்வதும் அவசியம்.
Sorry, no posts matched your criteria.