news

News May 6, 2024

இங்கிலாந்து வீரர்களை அனுமதிக்க வேண்டும்

image

ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டிகளில் விளையாட வீரர்களை அனுமதிக்குமாறு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சியைத் தொடங்க, இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப இருந்தனர். ஆனால், ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீரர்கள் நாடு திரும்புவது அணிகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News May 6, 2024

இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன

image

முதலீட்டாளர்களின் குருவாக கருதப்படும் வாரன் பஃபெட், இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியா போன்ற நாடுகளில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அங்கு முதலீடு செய்வது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

News May 6, 2024

தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை

image

+2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க, மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு சுகாதாரத் துறை மூலம் 100 மனநல ஆலோசகர்கள் மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்கவுள்ளனர். சுழற்சிக்கு 30 ஆலோசகர்கள் வீதம், 3 சுழற்சியில் செயல்படுவர். மனநல ஆலோசனைகளுக்கு ‘104’ மற்றும் ‘14416’ ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News May 6, 2024

ராட் வெய்லர் நாய்களை பிடிக்கச் சட்டச் சிக்கல்

image

சிறுமியைக் கடித்துக் குதறிய நாய்களைப் பிடிக்க தற்போது வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராட் வெய்லர் வகை நாயை வளர்க்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகக் கூறினார். இதனால், அந்த இன நாய்களைப் பிடிக்கச் சட்டச் சிக்கல் இருப்பதால், ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News May 6, 2024

34 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சனும், ரஜினியும்

image

நடிகர் அமிதாப் பச்சனின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ‘வேட்டையன்’ படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 34 ஆண்டுகளுக்கு பின் அமிதாப் பச்சனும், ரஜினியும் ஒரே காட்சியில் நடித்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஜினியின் 171ஆவது படமான இதனை, ஞானவேல் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

News May 6, 2024

அஜாக்கிரதையால் பலியாகும் இளைஞர்கள்

image

நண்பர்களோடு சுற்றுலாச் செல்லும் இளைஞர்கள், அஜாக்கிரதையால் பலியாவது சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. விடுமுறை தினத்தைக் கழிக்க, கொண்டாட்ட மனநிலையோடு நீர்நிலைகளில் குளிக்கும் அவர்கள், விளையாட்டாக ஆழமான பகுதிகளுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், இளைஞர்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

News May 6, 2024

EX அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் விசாரணை

image

நெல்லை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் விசாரணை நடந்து வருகிறது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இறப்புக்கு முன் அவர் எழுதிய 2 மரண வாக்குமூலம் கடிதத்தில், கட்சி நிர்வாகிகள் பலரது பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News May 6, 2024

தோனி விளையாடாமலேயே இருக்கலாம்: ஹர்பஜன்

image

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும் அவரது ஓய்வு குறித்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் தோனியை விமர்சித்திருக்கிறார். “தோனி 9ஆவது வீரராக களமிறங்கப் போகிறார் என்றால் அவருக்குப் பதில் பவுலர் ஒருவரை அணியில் எடுக்கலாம். முன் வரிசையில் களமிறங்க முடியாது என்றால் விளையாடாமலே இருக்கலாம்” என்று அவர் கூறியது பேசுபொருள் ஆகியிருக்கிறது.

News May 6, 2024

₹800 கோடியை இழந்த ரேகா ஜுன்ஜுன்வாலா

image

பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா, டைட்டன் நிறுவனத்தில் 5.35 சதவீத பங்குகளை வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது பங்கின் மதிப்பு ₹16,792 கோடியாக இருந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, டைட்டனின் பங்கு மதிப்பு எதிர்பாராத விதமாக 5%-க்கு மேல் சரிந்தது. இதனால், அவரின் பங்கு மதிப்பு சில நிமிடங்களில் ₹800 கோடியை இழந்தார்.

News May 6, 2024

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்க வந்தேன்

image

ஒடிசா செல்வ வளம் மிகுந்த மாநிலமாக இருக்கும்போது, அதன் மக்கள் ஏழைகளாக இருக்க காங்கிரசும், பிஜு ஜனதா தளமும்தான் காரணம் என பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். பெஹ்ராம்பூரில் பிரசாரம் செய்த அவர், பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க வந்ததாகத் தெரிவித்தார். ஜூன் 4ஆம் தேதி பிஜு ஜனதா தள ஆட்சி காலாவதியாகும் எனவும், ஜூன் 10ஆம் தேதி பாஜக முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!