India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் வெளியீடு, தள்ளிப் போவதாக தகவல் கசிந்துள்ளது. படத்தின் பின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால், ஜூன் 13ஆம் தேதி தனுஷின் ‘ராயன்’ படம் வெளியாகும் என்று கூறப்படுவதால், இந்தியன் 2 படம் ஜூலை 18ஆம் தேதிக்குத் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
*வெளியில் செல்லும்போது, புற ஊதாக் கதிர்கள் கூந்தலை சேதப்படுத்தாத வகையில், தலையை மறைக்கும் தொப்பி அணியலாம். *கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும். *கோடை காலத்தில் முடி உடைவது மற்றும் உதிருவதைத் தடுக்க, முன்கூட்டியே வெட்டி விடுவது பாதுகாப்பானது. *தலை முடிக்கு ஹீட்டர் பயன்படுத்துவதை குறைப்பது நல்லது. *கூந்தலைப் பாதுகாக்க தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
3ஆம் கட்ட தேர்தல் நாளை 94 தொகுதிகளில் நடைபெற்றாலும், அனைவரின் கவனமும் குஜராத்தை நோக்கியே உள்ளது. இதற்கு காரணம், குஜராத்தின் 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவது தான். 2014, 2019 போல இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. மறுபுறம், காங்கிரஸின் பிரியங்கா, குஜராத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MBBS, BDS படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாகவும், ₹20 லட்சத்துக்கு வினாத்தாள் விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மும்பையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 20 வயது மாணவர் ஒருவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் சவுபின் சாஹிருக்கு ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றியதாக கேரளாவைச் சேர்ந்த சிராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி மனு தாக்கல் செய்த நிலையில், வரும் 22ஆம் தேதி வரை அவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
CSK வீரர் தோனி, பஞ்சாப் அணிக்கு வர தனக்கு விருப்பமுள்ளதாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். பஞ்சாப் அணியில் தோனி இருக்க வேண்டுமென்று, ரசிகர் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தாவிடம் X பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “எல்லோரும் அவரை விரும்புவார்கள். நேற்று பஞ்சாப் அணி வெல்லும், தோனி நிறைய சிக்ஸ் அடிப்பார் என ஆவலுடன் இருந்தேன். ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பாஸ்கர் சக்தி, வடக்கன் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ஹீரோவாக குங்கும ராஜ், ஹீரோயினாக வைரமாலா நடித்துள்ளனர். இவர்களுக்கு இதுதான் அறிமுக படம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நெல்லை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமாரின் செல்போன் மாயமாகியுள்ளது. அவர் உயிரிழந்து கிடந்த இடத்தில் அவரது ஆதார், ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் தீவிர சோதனை நடந்து வருகிறது. அத்துடன், இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
வெயில் வாட்டி வதைப்பதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டிகள் வரை பீர் விற்பனை நடைபெறும். ஆனால், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் பெட்டிகள் வரை பீர் விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை காலத்தை தமிழ்நாடு கூலிங் பீர் குடித்து கழிக்கிறது.
Sorry, no posts matched your criteria.