India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாய் கடி, கீறல் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். அதுபோல் சிகிச்சை பெற செல்லும் முன்பு, நமக்கு நாமே செய்ய வேண்டிய முதலுவிகள் குறித்து சில பரிந்துரைகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர். அதில், நாய் கடித்த இடத்தை உடனடியாக சோப்பு, தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். காயம்பட்ட இடத்தில் தூசு படியாமல் இருக்க வெள்ளை துணியால் மூடி, கட்ட வேண்டும்.
கெஜ்ரிவாலுக்கு எதிராக NIA விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி முதல்வர் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், Sikhs for Justice என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து ஆம் ஆத்மிக்கு 16 மில்லியன் டாலர் நன்கொடை வாங்கியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, NIA விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு, கார்கள் வசதி, விமானப் போக்குவரத்து, வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தங்குமிடம், உணவுவசதி உள்ளிட்ட சலுகைகள் உண்டு.
இந்தியாவில் மிக உயர்ந்த அரசுத்துறை பதவியான ஐஏஎஸ் பதவியிலுள்ள அதிகாரிகளுக்கு மாதம் ₹56,100 முதல் ₹1,31,249 வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்களை விட இஸ்ரோ, டிஆர்டிஓ விஞ்ஞானிகள், பொறியாளர்கள், இந்திய வனத்துறை அதிகாரிகள் (IFS), பல்கலைக்கழக பேராசிரியர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் அதிக ஊதியம் வாங்குகின்றனர். IFS அதிகாரிகள் ₹1,77,500 முதல் ₹2,25,000 வரை ஊதியம் பெறுகின்றனர்.
ரேவண்ணாவின் ஜாமின் மனுவை நாளை விசாரிப்பதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண்களுடன் ரேவண்ணா நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் ஜாமின் கோரி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), நாளை 3ஆவது முறையாக விண்வெளிக்குப் பறக்கவுள்ளார். போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் பைலட்டாகவும், பட்ச் வில்மோர் கமாண்டராகவும் செயல்பட உள்ளனர். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு, ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அங்கு 1 வார காலம் தங்கி இருவரும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
நடிகர் தனுஷ் எழுதி, இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ திரைப்படம், வரும் மே மாதம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தனுஷின் 50ஆவது படமான இதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாடல் வரும் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான 4ஆவது மகளிர் டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய சாதனை படைத்துள்ளார். இன்று தனது 300ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கிய அவர், இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் களமிறங்கிய 2ஆவது வீராங்கனை மற்றும் சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5ஆவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். முதலிடத்தில் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் (333) உள்ளார்.
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். செங்கமலப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்த நிலையில், மேலும் சிலர் குடோனுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சில நாட்களுக்குமுன் விருதுநகர் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் திண்டாடுகிறோம். வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை கடைபிடிக்கலாம். இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள் அணிந்து கொள்வது வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது, குளிர்ச்சியான உணவுகளை உண்பது உடலுக்கு நல்லது. வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் பயணங்களை தவிர்க்கலாம்.
Sorry, no posts matched your criteria.