India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தயிரானது பால் வகையைச் சேர்ந்த உணவுப் பொருளாகும். இதை இரவு நேரத்தில் சாப்பிடலாமா, கூடாதா என்பதில் பலருக்கு குழப்பம் உண்டு. வயிற்று பிரச்னை இருப்பவர்கள் இரவு உணவில் தயிரை சேர்த்தால் செரிமான கோளாறு உண்டாகும். இரவில் நம் உடலுக்கு பெரிதாக உழைப்பு இல்லாததால் உணவு ஜீரணம் ஆவதற்கு சிரமம் ஏற்படும். இதனாலேயே, இரவில் உணவுடன் தயிர் கலப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமான தோழி’ தொடர் முடிவுக்கு வந்தது. பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘பிரியமான தோழி’ தொடரில், பவித்ரா, சங்கவி, ஆதி கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் அதே நேரத்தில் (பகல் 1 மணி), ‘புன்னகைப் பூவே’ என்ற புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் வீரர்களுக்கான பரிசுத்தொகையை பாக்., கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கோப்பையை வென்றால் இந்திய மதிப்பில் தலா ரூ.83 லட்சத்தை ஒவ்வொரு வீரரும் பெறுவார்கள். பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில், வரும் ஜூன் 6-ஆம் தேதி அமெரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த டி20 உலகக் கோப்பையில் அசத்திய பாகிஸ்தான், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது.
நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல நாளை முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி இன்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 21,446 வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. <
பொறியியல் படிப்பில் சேர ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதையடுத்து, உயர்கல்விக்கு மாணவ- மாணவியர் விண்ணப்பிக்க ஏதுவாக இன்று காலை முதல் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 20,097 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு, கண்காணிப்புக்காக வீடுகளில் சிசிடிவி பொருத்துவது அதிகரித்து விட்டது. அதுபோல பொருத்துகையில், கீழ்காணும் யோசனையை பின்பற்றலாம். * சுழலும் சிசிடிவி பொருத்தினால், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும் *வைஃபை சிசிடிவி எனில், தொலைவில் இருந்தாலும் பார்க்கலாம் *அபாய ஒலி எழுப்பும் வசதியிருந்தால், யாரேனும் மர்ம நபர் நடமாடினால் ஒலி எழுப்பும் *பேசும் வசதியிருந்தால், உரையாட முடியும்.
இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் மாதம் 1,37,952 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 0.46% அதிகம். ஆனால், மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 14,766 குறைவு. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுஜூகி 40.93% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2ஆவது இடத்தில் ஹூண்டாய், 3ஆவது இடத்தில் டாடா உள்ளது.
கோலியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளதாக பாக்., கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். கோலி சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை என்ற அவர், பாக்., வெற்றியை உறுதி செய்ய அவரை விரைவில் வீழ்த்த வேண்டும் என்றார். உலகக் கோப்பையில் பாக்., அணி இந்தியாவை ஜூன் 9இல் சந்திக்கிறது. பாக்., எதிராக 10 டி20 போட்டியில் ஆடியுள்ள கோலி, 488 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பையில் பாக்., எதிராக 82 ரன்கள் எடுத்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
MI-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை, எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட, மும்பை அணி ஐபிஎல் தொடரில் வெளியேறிவிடும். ஹைதராபாத் அணியை வீழ்த்துமா மும்பை?
Sorry, no posts matched your criteria.