news

News May 6, 2024

நாளை 3ஆம் கட்டத் தேர்தல்; இறுதிக்கட்ட ஏற்பாடுகள்

image

மக்களவைக்கு நாளை 3ஆவது கட்டத் தேர்தல் நடைபெறுவதால், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 3ஆவது கட்டமாக அசாம், பிஹார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமித் ஷா உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

News May 6, 2024

₹5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

image

ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி, யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளதால், ₹5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற, நவாஸ் கனி பணப்பட்டுவாடா செய்ததாக வாக்குப்பதிவுக்கு சில நாள்களுக்கு முன்பு, துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

News May 6, 2024

விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஹைதராபாத் அணி

image

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற MI அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் களமிறங்கிய SRH, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக, 90 ரன்களுக்கு 3 விக்கெட் இருந்த நிலையில், அடுத்த 46 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. SRH அணி தற்போது வரை 17 ஓவர்களில் 136/8 ரன்கள் எடுத்துள்ளது.

News May 6, 2024

ராமர் அவதாரம் முடிந்த பிறகு ஹனுமான் எங்கு சென்றார்?

image

சிரஞ்சீவியான ஹனுமான், நாராயணரின் ராமர் அவதாரம் முடிந்த பிறகும் பூமியில் வாழ்வதாகவும், திரேதா யுகத்தில் நாராயணர், கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனனின் ரதத்தில் கொடியாக எழுந்தருளியதாகவும் பூராணம் கூறுகிறது. இதையடுத்து இமயமலை சென்று மறைவிடத்தில் தவமிருப்பதாகவும், கலியுகத்தில் நாராயணர் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தில் அவரை காண காத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

News May 6, 2024

அமிதாப் பச்சனுடன் தன்னை ஒப்பிட்ட கங்கனா

image

அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் தனக்குத்தான் அதிக அன்பும் மரியாதையும் கிடைப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எங்கு சென்றாலும் தனக்கு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மனங்களில் தான் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தாா். இவரின் பேச்சை சிலர் விமர்சித்து வருகிறார்கள். பாஜக சார்பாக மண்டி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.

News May 6, 2024

Deep Fake வீடியோக்களை பயன்படுத்தத் தடை

image

Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறைந்த தலைவர்கள் பேசுவது போல் வீடியோவை உருவாக்கி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. சில கட்சிகள் விமர்சனத்துக்கும் பயன்படுத்துகின்றன. அதற்குத் தடை விதித்த EC, ஏற்கெனவே வெளியிட்ட Deepfake வீடியோக்களை 3 மணி நேரத்தில் நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

News May 6, 2024

விண்வெளிக்கு செல்லும் விநாயகர் சிலை

image

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3ஆவது முறையாக நாளை செல்லவுள்ளார். இது அவரின் 3ஆவது விண்வெளி பயணமாகும். இதுகுறித்து பேட்டியளித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி செல்கையில் தன்னுடன் பகவத் கீதை புத்தகம், விநாயகர் சிலையை கொண்டு செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தான் தீவிர மதவாதி கிடையாது, ஆன்மிகவாதி என்றார் அவர்.

News May 6, 2024

காசோலை பின்புறத்தில் கையெழுத்திடச் சொல்வது ஏன்?

image

காசோலைகளில் Bearer Cheque, Order Cheque என 2 வகைகள் உள்ளன. Bearer Cheque காசோலையை கொடுத்து வங்கியில் யார் வேண்டுமானாலும் பணம் பெறலாம். அதை யாரேனும் திருடி வங்கியில் கொடுத்தாலும் பணம் தர வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கவே பின்புறத்தில் கையொப்பமிட வைத்து பணம் தரப்படுகிறது. ஆனால், Order Cheque-ல் பெயர் உள்ள நபருக்கே பணம் தரப்படுகிறது. எனவே, அதன் பின்புறம் கையெழுத்திட அவசியமில்லை.

News May 6, 2024

நெல்லை-அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா ரயில் அறிமுகம்

image

நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயிலில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி, கயா, அயோத்திக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ₹18,550 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமின்

image

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு மருத்துவ காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி கொடுத்த ₹538.62 கோடியில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடத்திருப்பதாகக் கூறி ED அவரை கைது செய்திருந்தது. 75 வயதான அவர் புற்றுநோய் பாதிப்புடன் இருந்த நிலையில், தற்போது அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!