India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் 24ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீடித்து கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கணிப்புகள், திமுக கூட்டணி, பாஜக கூட்டணியை சுற்றியே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அக்கட்சி தொண்டர்கள் சுணங்கியுள்ள நிலையில், 5 முதல் 10 இடங்கள் வரை வெல்ல முடியுமென இபிஎஸ் திடமாக நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நாடே எதிர்நோக்கியுள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்தி திமுகவுக்கு உளவுத்துறையும், அக்கட்சிக்கு வேண்டப்பட்ட தனியார் நிறுவனமும் ரிப்போர்ட் அளித்துள்ளன. அதில் திமுக கூட்டணிக்கு 35 தொகுதி வரை கிடைக்கும் என கூறப்பட்டிருப்பதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலில் பல நெருக்கடிகள் இருக்குமென கூறப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, 75 வயதானோருக்கு பதவியில்லை என்ற விதி பாஜகவில் மோடியால் கொண்டு வரப்பட்டு, அத்வானி உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டனர். அதே விதியை சுட்டிகாட்டி, 75 வயதாக போகும் மோடி பிரதமராக மாட்டார், அமித் ஷாதான் பிரதமராவார் என கெஜ்ரிவால் கூறியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அவர் என்ன செய்ய போகிறார் என்பதை காண நாடே காத்திருக்கிறது.
சென்னை ஐஐடி-எம் சார்பில் இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற இளையராஜா கூறியதாவது, இசை என் உயிர் மூச்சைப் போன்றது என்றும், இசையமைப்பது தனக்கு மூச்சு விடுவதைப் போல் இயல்பானது எனவும் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி 2014 முதல் 2022 வரை விதிகளை மீறி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ₹7 கோடி நிதி பெற்றுள்ளதாகவும், இதில் FCRA, RPA, IPC விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்களின் மின்னஞ்சலின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளுக்கு, தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த 2ஆம் தேதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்தது. அதனை ஆராய்ந்த மதிப்பீட்டு குழு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என மே 10ஆம் தேதி பரிந்துரைத்தது. இதையடுத்து ஆவணங்களை சரிபார்த்த தமிழக அரசு, அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 500 யூனிட் பயன்படுத்தும் பயனர்களின் பதிவு செய்யப்பட செல்போன் எண்ணிற்கு ‘94987 94987’ என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பப்படும். அதில், View, Pay Bill லிங்க் இருக்கும். View பக்கத்தில் மின் பயன்பாடு, கட்டண விவரம் இருக்கும். Pay bill அழுத்தினால் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.
இடைக்கால ஜாமினில் வெளியே வந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வென்றாலும், மோடி பிரதமராக மாட்டார், அமித் ஷாவே பிரதமராவார், யோகி ஆதித்யநாத் 3 மாதங்களில் நீக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார். இதனால் 400 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம் என பிரசாரம் செய்து வந்த பாஜக தலைவர்கள், மோடியே அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்கின்றனர்.
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம், 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எதார்த்தமான கதைக்களத்தில் உருவான இப்படம், நல்ல வசூலையும் ஈட்டியது. இந்நிலையில், படத்தை 4 இந்திய மொழிகளிலும், 1 சர்வதேச மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.