India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலத்தில் உலர் திராட்சையை நீரில் ஊறவைத்த நீரை குடித்துவர உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நீருக்கு குளிரிச்சியைத் தன்மை உண்டு என்பதால் கோடை காலத்தில் உடல் வறண்டு போவதைத் தடுத்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும், நார் சத்து அதிகமாகவும் இருப்பதால், செரிமானப் பிரச்னை, மலப் பிரச்னையைத் தீர்க்கும்.
பாடலுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக இளையராஜா, வைரமுத்து இடையேயான பிரச்னை குறித்து நடிகை குஷ்பு சுவாரஷ்யமாகப் பதிலளித்துள்ளார். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே டீம் வொர்க்தான் என்றவர், இளையராஜா, வைரமுத்து இடையே போர் போய்க்கொண்டிருக்கிறது என்றால் அவர்களிடம்தான் இதுகுறித்து கேள்வி கேட்கவேண்டும் எனக் கூறினார். மேலும், இந்தப் பிரச்னையில் தயாரிப்பாளராக நான் தலையிட முடியாது என்றார்.
➤ 1861 – நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்.
➤ 1895 – ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பர்க்கில் அறிமுகப்படுத்தினார்.
➤ 1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
➤ 2000 – விளாதிமிர் புதின் ரஷ்யாவின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
குஜராத் உள்பட 12 மாவட்டங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 16 பள்ளிகளின் வளாகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை சாடினார். மேலும், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 150 இடங்களில் கூட வெற்றிபெறாது என்றார்.
பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் வருகையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேலும் வலுப்பெறும் என பாக்., அணி கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அனுபவமிக்க பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பாக்., அணியின் பயிற்சியாளராக இணைந்துள்ளது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், உலகக்கோப்பைக்கான திட்டங்கள், யுக்திகள் குறித்து அவர் அணி நிர்வாகத்திடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்றார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 141 ▶குறள்: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். ▶பொருள்: பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. சற்று வித்தியாசமான கதையில் இருக்கும் என நடிகர் ராணா கூறியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர், கோர்ட், போலீஸ் பற்றிய பல கருத்துக்கள் நிறைந்த படமாக இது இருக்கும் என்றார். இப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேர்தல் முடிவுக்குப் பின் உலக நாடுகள் இந்திய ஜனநாயகத்தை புதிய கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து வெளிநாடுகள் கூறும் கருத்துக்களுக்கு பதிலளித்த அவர், அந்நிய சக்திகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து மக்களவைத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர் என விமர்சித்தார். மேலும், அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடியும் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.