India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் காட்டுமன்னார்கோயில் மேலக்கடம்பூரில் உள்ளது ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம். கயிலை மலைக்குச் சென்று வழிபட்ட தேவர்களும் சித்தர்களும் கடம்பூர் கோயிலும் கயிலைக்கு நிகரானது என்று கருதி இங்கு வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயத்தின் சிறப்பே பிரதோஷ மூர்த்திதான். இங்குள்ள அமிர்தகடேசுவரர் ஆயுள் பலம் தருபவர் என்பதால் இங்கு சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், திருமணம் செய்தால் ஆயுளும் ஆரோக்கியமும் கூடும் என்பர்.
+2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னத்துரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து கூறினார். சென்னைக்கு படிக்க வருமாறு அழைத்ததாகவும், நெல்லையிலேயே படிக்க விரும்புவதாக மாணவன் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும் தனது சாதனையின் மூலம் திருப்பித் தாக்கியுள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரபல காமெடி நடிகர் கிங்காங் மூத்த மகள் சக்தி பிரியா +2 தேர்வு எழுதி இருந்த நிலையில், அவர் 600க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய பின் கிங்காங் கூறுகையில், “எனது மகள் எங்களைப் பெருமைப்படச் செய்துள்ளார். அவளின் கனவை நிறைவேற்றுவதுதான் எங்களின் விருப்பம். கல்லூரியில் அவருக்கு பிடித்த படிப்பை படிக்க வைப்போம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராக, மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் பொருளாதாரம் சுற்றுலாவைச் சார்ந்துள்ளதாகக் கூறிய மாலத்தீவு சுற்றுலா அமைச்சர் இப்ராஹிம் ஃபைசல், தங்களை ஆதரிக்குமாறு இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புதிய அரசு இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் ரூ.20,000 – 80,000 வரை வழங்கப்படும். இதற்கு <
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், வட உள் மாவட்டங்களான சேலம், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மே 10ஆம் தேதி வரை வெப்பநிலை 4 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது..
நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் இன்று காலை 7 மணிக்கு மூன்றாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் கர்நாடகா, குஜராத் உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 93 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் நடைபெறுவதால் இன்றைய தேர்தல் பாஜகவிற்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 51 பந்துகளை எதிர்கொண்ட மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் 101* ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டினார். இவரது அதிரடியால் மும்பை அணி 17.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதம் அடித்த SKY, மும்பை அணிக்காக அதிக சதங்கள் (2) அடித்த வீரர் என்ற ரோஹித்தின் சாதனையை சமன் செய்தார்.
* நாடு முழுவதும் மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
* பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
* ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
* Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
* டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்.
Sorry, no posts matched your criteria.