news

News May 7, 2024

இ-பாஸ் திட்டம் கை கொடுக்குமா?

image

ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இத்திட்டம், மலைப் பாதைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தாலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதக, பாதகங்கள் குறித்து ஆராயாமல் நீதிமன்றங்கள் இதுபோன்ற முடிவுகளை எடுப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உங்களது கருத்தை சொல்லுங்க.

News May 7, 2024

+2 தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

image

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த இரட்டைச் சகோதரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த நிர்மல், நிகில் என்ற இரட்டையர்கள், 600க்கு 478 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 7, 2024

மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியது ஏன்?

image

தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் மதுரையில் ஆடம்பரமாக நடத்தி முடித்தார். இது குறித்து மனம் திறந்த அவர், தனது திருமணம் சென்னை வடபழனியில் மிகவும் எளிமையாக நடந்ததாகத் தெரிவித்தார். பெண் வீட்டார் சார்பில் சிலர் வந்திருந்ததாகவும், மாப்பிள்ளை வீடு சார்பில் தான் மட்டுமே இருந்ததாகவும் கூறிய அவர், மகளின் திருமணத்தையாவது சிறப்பாக நடத்த எண்ணி அதிக செலவு செய்ததாகக் கூறினார்.

News May 7, 2024

ரோஹித் ஷர்மா தகுதியானவர்

image

டி20 உலகக் கோப்பையுடன் ரோஹித் ஷர்மாவை பார்க்க வேண்டுமென முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஐசிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில், டி20 உலகக் கோப்பையில் அவரது கேப்டன்சி, இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும், இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை வழிநடத்த அவர் சரியாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், உலகக் கோப்பையை வெல்ல ரோஹித் மிகவும் தகுதியானவர் என பாராட்டியுள்ளார்.

News May 7, 2024

பாலிடெக்னிக் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடக்கம்

image

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024 – 25ம் கல்வியாண்டுக்கான நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளத்தில் மே 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு கட்டணம் ₹150ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST மாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.

News May 7, 2024

தோனி ஏன் தாமதமாக களமிறங்குகிறார்?

image

PBKS-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், தோனி தாமதமாக களமிறங்கியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம், அவரது காலில் காயம் ஏற்பட்டிருப்பதுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் சென்னை போட்டியின் கடைசி ஓவரில் தோனி ரன் எடுக்க ஓடவில்லை என ரசிகர்கள் கூறுகின்றனர். மற்றொரு விக்கெட் கீப்பரான கான்வேயும் காயம் காரணமாக விளையாடாததால் தோனி விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

News May 7, 2024

NRI வாடிக்கையாளர்களும் இனி UPI பரிவர்த்தனை செய்யலாம்

image

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், NRI வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, இந்தியாவில் UPI பரிவர்த்தனை செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய அம்சத்தை, அந்த வங்கியின் iMobile Pay செயலி மூலம் NRI வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.

News May 7, 2024

11 மணி நிலவரப்படி 25.41% வாக்குகள் பதிவு

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் வெயில், மழையை பொருட்படுத்தாது மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 27.34%, சத்தீஸ்கர் 29.90%, கோவா 30.94%, குஜராத் 24.35%, கர்நாடகா 24.48%, வாக்குகள் பதிவாகியுள்ளன.

News May 7, 2024

மெட் காலாவில் ஜொலித்த ஆலியா பட்

image

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரும் பேஷன் ஷோ மெட் காலா. இந்நிகழ்வினை பிரபல ஃபேஷன் இதழான Vogue நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள, உலகம் முழுவதிலும் இருந்து பிரபலமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நேற்று நடந்த இந்நிகழ்வில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்து கொண்டார். அவர் சாப்யாஷாச்சியின் சேலையில் ஜொலித்தார்.

News May 7, 2024

சவுக்கு சங்கர் மீண்டும் கைது

image

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி, கோவை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை கஞ்சா வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், முன் ஜாமின் வழங்கக் கோரி, விரைவில் நீதிமன்றத்தை நாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!