India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடலுக்கு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், ஆதலால், இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டி20 WC இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகிய 2 பேரும் நிச்சயம் விளையாட வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். ஜூன் 1ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது. இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாகவும், இதேபோல் நடுவரிசையில் சிவம் துபே அபாரமாக விளையாடுவதாகவும் கூறினார்.
அரை லிட்டர் பாலில் ஏலக்காயை போட்டு நன்றாக காய்ச்சி, ஆறவைக்க வேண்டும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து, தோலை நீக்கி அரைக்க வேண்டும். ஆறவைத்த பாலுடன் பாதாம், பிஸ்தா விழுது போட்டு, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும். தேன், குங்குமப்பூ, சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, குளிர வைத்தால் சுவையான பாதாம் சர்பத் ரெடி.
ஜப்பான் நாட்டில் நேற்று 6G தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் 5G தொழில்நுட்பம் மூலம் சாதாரணமாகவே 1 Gbps வேகம் வரை இண்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 4G தொழில்நுட்பத்தை ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகப்படுத்தப் போவதாக BSNL கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் அதிகபட்சமாக 45 Mbps இண்டர்நெட் வேகம் கிடைக்கும் என்று BSNL விளம்பரம் செய்து வருகிறது.
கோடைகாலத்தில் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன், ஐஸ் வாட்டர் அருந்துவது ஆபத்து என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும். இதனால் பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய சுகாதாரத்துறை அவ்வாறு வெளியில் சென்று வந்தால் குளிர்பானம், ஐஸ் வாட்டரை உடனே பருகாமல், சற்று நேரம் கழித்து அருந்துவது நல்லது எனக் கூறியுள்ளது.
CSK-RR இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மே 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, நாளை மறுநாள் (மே 9ஆம் தேதி) காலை 10.40 மணிக்கு <
அம்பேத்கருக்கு அரசியலமைப்பை உருவாக்கிய முழு பெருமையும் கிடைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் செயல்பட்டதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். அரசியலமைப்பை உருவாக்கியதில் அம்பேத்கருக்கு பெரிய பங்களிப்பு இல்லை, நேருதான் அதிக பங்களிப்பு அளித்தார் என காங்கிரஸ் பிரசாரம் செய்ததாகவும், வரலாற்றை திரித்து, உண்மையான சுதந்திர போராட்ட வீரர்களை மறக்கடித்து விட்டதாகவும் மோடி விமர்சித்தார்.
இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, திரைத்துறையை விட்டு விலகுவீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தன்னிடம் பல படங்கள் கைவசம் இருப்பதாகவும், தற்போதைக்கு திரையுலகை விட்டு விலக முடியாது எனவும் தெரிவித்தார். மண்டி தொகுதியில் வெற்றி பெற காங்., தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
UPI மூலம் பணம் செலுத்துவது எளிதாக இருப்பதால், டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருப்பினும், இவை நுகர்வோரின் செலவை பெருமளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிறது. ஐஐடி டெல்லி சார்பில், 276 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 74% பேர் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் அதிகமாகச் செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர். UPI பேமெண்ட்டால் உங்கள் செலவு அதிகரித்ததா?
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் காங்கிரஸுக்கு எதிராக தினமும் பொய் பிரசாரம் செய்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கிடையாதென காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்த அளவை அதிகரிப்போம் என்றுதான் காங்கிரஸ் கூறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.