India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள சில பாரம்பரிய உணவுகள், அந்த மாவட்டங்களில் சாப்பிட்டால் மட்டுமே உண்மையான சுவை தெரியும். அவை: ஆம்பூர் ‘பிரியாணி’, திருவண்ணாமலை ‘திணைச் சோறு’, காரைக்குடி ‘உப்புக்கண்டம்’, சிதம்பரம் ‘இறால் வறுவல்’, கொங்கு ‘சந்தகை’, ராமேஸ்வரம் ‘மாசிக் கருவாட்டு தொக்கு’, வேலூர் ‘வாத்துக்கறி’, விருதுநகர் பரோட்டா, திண்டுக்கல் பிரியாணி’ போன்ற உணவுகளை அந்தந்த ஊர்களில் ஒருமுறையாவது சுவைத்துப் பாருங்கள்.
பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம், உலகம் முழுவதும் ₹150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, பகத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும். ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், வெற்றிப் படங்களான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் வரிசையில் ஆவேஷமும் இணைந்துள்ளது.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால், தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், கர்ப்ப காலத்தில் தனது கணவர் எந்த அளவுக்கு உதவியாக இருந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். உன்னைப் போல ஒரு மனிதன் கிடைத்ததற்கு தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவுக்கு அரசியல் தவிர்த்து வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அவருக்கு உதவக்கூடிய முதல் ஆளாக தான் இருப்பேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “பால் தாக்கரே குடும்பம் மீது எனக்கு என்றுமே அன்பு உண்டு. அதனால் தான், பாஜகவுக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும், சிவசேனாவைச் சேர்ந்தவரை முதல்வராக்கினேன்” எனக் கூறியுள்ளார்.
KKR அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக WI முன்னாள் வீரர் இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார். KKR அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததற்கு கம்பீரின் வழிகாட்டுதலே காரணம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிஷப், “தோல்வி அடையும்போது அதற்கும் கம்பீர்தான் காரணம் என கூறுவீர்களா அல்லது ஸ்ரேயாஸை குறை சொல்வீர்களா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
64 நாடுகளில் தேர்தல் நடக்கும் 2024 மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக கருதப்படுகிறது. இந்தாண்டு ரஷ்யா, இந்தோனேசியா, தென் கொரியா, வங்கதேசம், தைவான், பாகிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் ஏற்கெனவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்துவரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 400 கோடி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத் திருவிழாவை உலகமே கொண்டாடட்டும்!
INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதி ஆக்குவோம் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். ஜார்க்கண்ட் பிரசாரத்தில் பேசிய அவர், பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி விரும்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், தங்கள் ஆட்சியில் ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ₹1 லட்சம் வழங்கி, அனைவரையும் லட்சாதிபதி ஆக்குவோம் எனக் கூறினார்.
3ஆவது கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50% வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 3ஆவது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி, தேர்தலில் 50.71% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்கத்தா அணியில் இருந்த விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். தனது தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்காக நாடு திரும்பிய அவர், தற்போது மீண்டும் அணிக்கு திரும்புவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
ரஷ்ய அதிபராக 5ஆவது முறையாக புதின் பதவியேற்றார். எல்சினுக்கு பிறகு, 1999இல் அதிபரான அவர், தொடர்ந்து அப்பதவியை வகிக்கிறார். இடையில் 2008 முதல் 2012 வரை மெத்வதேவ் அதிபராக இருந்தார். அதன்பிறகு, புதின் மீண்டும் அதிபரானார். இன்று, 5ஆவது முறையாக பதவியேற்ற புதின், 2030 வரை அப்பதவியை வகிப்பார். இதன்மூலம் ஸ்டாலினுக்கு பிறகு, அதிபராக நீண்டகாலம் இருந்த தலைவர் எனும் பெருமையை பெறுவார்.
Sorry, no posts matched your criteria.