India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மே 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
எம்.பி தேர்தலில் போட்டியிடும் 121 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என ADR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 359 பேர் 5ஆம் வகுப்பு வரையிலும், 647 வேட்பாளர்கள் 8ஆம் வகுப்பும், 1303 பேர் 12ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 1,502 பேர் பட்ட படிப்பை முடித்துள்ளனர். மிகவும் சொற்பமாக, 198 வேட்பாளர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பெற்றுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிறுமியை வாட்ஸ்அப் மூலம் ஆபாசமாக பேசி துன்புறுத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைதானார். இந்நிலையில், இளைஞரின் குடும்பம் நல்ல பின்னணியில் இருப்பதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட இளைஞருக்கு ம.பி. உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜரான மாணவரின் தந்தை, தங்கள் மகன் செய்ததை நினைத்து வெட்கப்படுவதாக கூறி மன்னிப்பு கேட்டார்.
ஆளுநர் மாளிகை சார்பாக காவி வண்ணத்தில் திருவள்ளுவர் புகைப்படம் வெளியானதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மதம் சார்ந்து புகைப்படம் வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘திருவள்ளுவர் விழா’ என்ற பெயரில் ஆளுநர் மாளிகை காவி வண்ணத்தில் அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது.
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்த்திசையில் வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். பச்சை என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மணி, முனுசாமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
*மேஷம் – போட்டி உண்டாகும்
*ரிஷபம் – செலவு அதிகரிக்கும்
*மிதுனம் – அமைதி ஏற்படும்
*கடகம் – சிந்தனை மேலோங்கும்
*சிம்மம் – இனிமையான நாள்
*கன்னி – நன்மை உண்டாகும்
*துலாம் – சோதனை ஏற்படும்
*விருச்சிகம் – ஆக்கப்பூர்வமான நாள்
*தனுசு – சாதனை படைக்க வாய்ப்பு
*மகரம் – பேராசையை தவிர்க்கவும் *கும்பம் – நஷ்டமடைவீர்கள் *மீனம் – சாந்தம் சாதகம்
சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 4’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், சுந்தர்.சி அடுத்ததாக ‘கலகலப்பு 3’ படத்தை இயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் போலி திராவிட மாடல் அரசு நடப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோயில் பராமரிப்பின்மை, மோசமான சாலைகள் தான் இந்த அரசின் சாதனைகள் என்று குற்றம் சாட்டிய அவர், கடந்த திமுக-காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவை சரி செய்யவே பாஜகவுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டதாக கூறினார். மோடியின் 10 ஆண்டு கால ஆட்சி டிரெய்லர் என்றும், இனிமேல் தான் மெயின் பிக்சர் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 56 பணியாளர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்த பாய்லர் வெடித்தபோது, 3 கி.மீ., சுற்றளவுக்கு சத்தம் கேட்டதுடன், கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறியதாக மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த மாதம் பீர் விற்பனை 26.55% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், காஞ்சிபுரம், சேலம், திருப்பூர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி கூறும்போது, கோடைகாலத்தில் தடையின்றி பீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதனிடையே, இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுவுக்கான மவுசு குறைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.