news

News May 24, 2024

மீம்ஸ் மூலம் பிரபலமான கபோசு நாய் உயிரிழந்தது

image

மீம்ஸ் மூலம் பிரபலமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘கபோசு’ என்ற நாய் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் சமூக வலைதளங்களில் உருக்கமாக தெரிவித்துள்ளார். மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இந்த நாய்க்கு, கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, கிரிப்டோ கரன்சியின் லோகோவாக இந்த நாயின் புகைப்படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

image

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் அறிவிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறியுள்ள அவர், புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் முன்மொழிவு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

News May 24, 2024

மூன்று மாதங்களில் வழக்கை முடித்து வைக்க உத்தரவு

image

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. ஒரே ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், விரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்றும் CBI தெரிவித்துள்ளது.

News May 24, 2024

சென்செக்ஸில் இடம்பெறும் அதானி போர்ட்

image

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸில் இருந்து விப்ரோ நிறுவனத்தை நீக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாப் 30 நிறுவனங்களை கொண்ட சென்செக்ஸ் பட்டியலில் ஜூன் 24ஆம் தேதி விப்ரோ வெளியேற்றப்பட்டு, அதற்கு பதிலாக அதானி போர்ட் நிறுவனம் சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலம் சென்செக்ஸில் அதானி குழுமத்தின் நிறுவனம் முதல்முறையாக இடம்பெறுகிறது. நிஃப்டியில் 2 அதானி குழும நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

₹1 கோடி மதிப்பிலான பழைய ₹500, ₹1000 நோட்டு பறிமுதல்

image

சேலத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சபீரிடம் ₹1 கோடி மதிப்பிலான பழைய ₹500, ₹1000 நோட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், அம்மாப்பேட்டையில் உள்ள சபீர் வீட்டுக்குச் சென்ற போலீசார், ₹1 கோடி செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்தனர்.

News May 24, 2024

பாஜக கவுன்சிலர்கள் 2 பேர் தகுதி நீக்கம்

image

மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொண்ட காரணத்துக்காக, பாஜகவின் இரு கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினோத நிகழ்வு குஜராத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் நகராட்சி சட்டத்தின் கீழ், 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டோர் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், பாஜக கவுன்சிலர்கள் 2 பேருக்கு அண்மையில் 3ஆவது குழந்தை பிறந்த நிலையில், அவர்களை தகுதி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News May 24, 2024

கார்த்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

image

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி நடிக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி – அரவிந்த் சுவாமி இருவரும் ஒரே சைக்கிளில் பயணிப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் தஞ்சை பெரிய கோயில் படம் இடம்பெற்றிருப்பதால் இது கிராமத்து பின்னணி கொண்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது

News May 24, 2024

மோடிக்கு YES; தமிழனுக்கு NO? சீமான் கேள்வி

image

ஒடிஷாவை தமிழன் ஆண்டால் மோடிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? என சீமான் வினவியுள்ளார். வி.கே.பாண்டியன் முதல்வராக வருவதற்கு முன்பே ஒடிஷாவை தமிழன்தான் ஆளலாமா? என பாஜக விமர்சிப்பதாக தெரிவித்த அவர், குஜராத்தில் பிறந்த மோடி மட்டும் ஏன் இந்தியாவை ஆளுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொன்ன போது தங்களை விமர்சித்த பாஜக, இப்போது அதற்கு நேர் எதிராக பேசுவதாக கூறினார்.

News May 24, 2024

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பும் சூழலில், சில மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொள்ளிடம் ஆறு (திருச்சி), பவானி ஆறு (ஈரோடு), தாமிரபரணி ஆறு (நெல்லை ), குமரி கோதையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News May 24, 2024

குழந்தைகளிடம் செல்ஃபோனை கொடுக்காதீர்!

image

இணைய உலகில் செல்ஃபோன் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் செல்ஃபோனில் மூழ்கி கிடக்கின்றனர். இந்நிலையில், செல்ஃபோனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைகளின் மூளையை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கண்களுக்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும், உடல் பருமன், சோம்பல், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளை உருவாக்குவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!