news

News May 30, 2024

இன்று முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

image

+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, ஜூன் 4க்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 30, 2024

பாஜகவுக்கு ‘ரசகுல்லா’தான் கிடைக்கும்: மம்தா பானர்ஜி

image

மேற்கு வங்கத்தில் இம்முறை அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என மோடி கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சுதந்திரம், மதச்சார்பின்மை, மனிதநேயம் இருக்காது என மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். பாஜகவுக்கு வங்காளிகளிடமிருந்து ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும்” எனக் கிண்டலாக தெரிவித்தார்.

News May 30, 2024

கடைசி வரை வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும்

image

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4இல் வெளியாக உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக செயல்பட அதிமுக முகவர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். எந்தக் கட்சி முன்னணிக்கு வந்தாலும், இறுதி சுற்று வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து விவரத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் தில்லுமுல்லு செய்கின்றனரா என்பதை கண்காணிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

News May 30, 2024

ஜூலையில் வெளியாகும் வணங்கான்?

image

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் நடித்துவரும் படம் ‘வணங்கான்’. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜூலை மாதம் இப்படம் ரிலீசாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதே மாதத்தில் இந்தியன் 2 படமும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

தீராத பிணி தீர்க்கும் க்ஷேத்ரபாலர்

image

உலகில் உள்ள நீர்நிலைகள் தொடங்கி செல்வ வைப்பிடங்கள் வரை அனைத்தையும் காக்க சிவபெருமானால் படைக்கப்பட்ட காவல் தெய்வம்தான் க்ஷேத்ரபாலர். சோழர்கள் காலத்தில் க்ஷேத்ரபாலர் வழிபாடு உச்சத்தில் இருந்தபோது, குடந்தை திருநல்லகூகூரில் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயிலில் அவருக்கென தனி சந்நிதி எழுப்பப்பட்டது. தீராத பிணிகளால் வாடுவோர் இங்கு வந்து பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

News May 30, 2024

விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை 30 நாள்களுக்கு மாற்றம்

image

பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இனி காட்பாடியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் என தென்மத்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

News May 30, 2024

பெட்ரோல், டீசல் வாகனங்கள் நிறுத்தப்படும்: நிதின் கட்காரி

image

அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். தற்போது மின்சாரத்தில் இயங்கும் பைக், கார்கள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் சாலைப் போக்குவரத்தில் பல பிரமாண்டமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், ₹100க்கு பெட்ரோல் போடுவதை விடவும், ₹4 செலவில் மின்சார வாகனங்களை இயக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

News May 30, 2024

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது

image

கடந்த ஆண்டு அதிவேகமாக பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்போனில் பேசியபடியே கார் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், மதுரை அண்ணாநகர் போலீசார் வாசனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 30, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிகிறது.
* RTE சட்டத்தின் கீழ் ஜூன் 3க்குள் 25% மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு.
* பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று முதல் 3 நாள்கள் தியானம் செய்கிறார்.
* கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
* இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது – தமிழக அரசு

News May 30, 2024

டீயை கொதிக்க வைத்து குடிப்பது உடலுக்கு தீங்கானது?

image

டீ சூடான பின்பும் நீண்ட நேரம் கொதிக்க விடுவதால் பாலின் Ph மதிப்பானது மிகவும் கடினமாக மாறுகின்றது. இதன் காரணமாக நெஞ்செரிச்சல், வயிற்றுவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அதிக அளவில் கொதிக்கவைப்பதன் காரணமாக பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடுவதுடன், அக்ரிலாமைடு எனும் கார்போஹைட்ரேட் உருவாகி அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!