India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வட இந்தியாவில் அதிகப்படியான வெயில் பதிவாகி வரும் சூழலில், தீ விபத்துகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் நேற்று 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், தீயணைப்புத்துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள் வந்துள்ளன. இதில், 183 அழைப்புகள் தீ விபத்து தொடர்பான அழைப்புகள் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தீ விபத்து தொடர்பாக 8,912 அழைப்புகள் வந்துள்ளது.
*மேஷம் – அமைதி தேவை * ரிஷபம் – ஆர்வம் மேலோங்கும் *மிதுனம் – சுப பலன்கள் உண்டாகும் *கடகம் – கோபத்தை குறைக்கவும் *சிம்மம் – முயற்சிக்கு ஏற்ற பலன், *கன்னி – பிறர் மீது பரிவு உண்டாகும் *துலாம் – பாராட்டு கிடைக்கும் *விருச்சிகம் – சிக்கலான நாள் *தனுசு – புதிய முயற்சி கை கொடுக்கும் *மகரம் – பொறுமை அவசியம் *கும்பம் – சோர்வு அதிகரிக்கும் *மீனம் – புகழ்ச்சி ஏற்படும்
தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நள்ளிரவு 1 மணி வரை விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், குமரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப் பட்டுள்ளதாகவும், கதாநாயகியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீலீலா உள்ளிட்டோரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பொறுப்புகளில் பெண்களை பணியமர்த்துவது இந்தியாவில் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டு 18.8% ஆக இருந்த பெண்களின் பங்களிப்பு, தற்போது 23.2% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு, தலைமை பொறுப்பேற்கும் பெண்களின் எண்ணிக்கை உயரவில்லை. தலைமை பொறுப்புகளை பெற பெண்கள் பல சவால்களை எதிர்கொள்வதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
வாக்காளர்கள் மீது கருத்துக்கணிப்புகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகே, Exit Poll முடிவுகளை வெளியிட முடியும். கருத்துக்கணிப்பு நடத்தும் ஊடகங்கள் சார்புதன்மையற்ற செயல்முறையை உறுதி செய்வதோடு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதும் கட்டாயம். கருத்துக்கணிப்பு நடத்துவதற்கான காலத்தை ஆணையம் ஒழுங்குப்படுத்தும்.
குமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வது தேர்தல் விதி மீறல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், ஒரு தனி மனிதனாக தியானம் செய்வதில் எந்த தவறும் இல்லையென முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான என்.கோபால்சுவாமி கூறுகிறார். அதே நேரம், இது தேர்தல் விதி மீறல் என குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், ஆளுங்கட்சியின் விதி மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவதில்லை என விமர்சித்தார்.
▶துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’
▶கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள ‘ஹிட்லிஸ்ட்’
▶முகமது ஆசிஃப் ஹமீது இயக்கத்தில் நாசர், தலைவாசல் விஜய் நடித்துள்ள ‘அகாலி’
▶ராம் கந்தசாமி இயக்கிய ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’
▶’ராட்சசன்’ படத்தில் வில்லனாக நடித்த சரவணனின் ‘குற்றப்பின்னணி’ ஆகிய 5 திரைப்படங்கள் நாளை திரைக்கு வரவுள்ளது.
சென்னையில் உள்ள ICF ரயில் பெட்டி தொழிற்சாலையில், அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்பெண்டர், ஃபிட்டர், எலக்ட்ரிஷன், பெயிண்டர், வெல்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட 1,010 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதுதொடர்பான பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் (24 வயதுக்கு உட்பட்டவர்கள்), <
Sorry, no posts matched your criteria.