India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*உங்கள் நேரம் குறைவு, எனவே மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து வீணாக்காதீர்கள். *புதிய யோசனைகளை உருவாக்கி செயல்படுத்துபவர்களே உண்மையான தலைவர்கள். *எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவது தான். *சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் ஒரு செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள். *நீங்கள் செய்யும் வேலையை நேசித்து, அதில் சிறந்து விளங்க முயற்சி செய்யுங்கள்.
இந்த முறை சரியான வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது தோனிக்கு தெரியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 43 வயதிலும் ஒரு கேப்டனாக தோனி அணிக்கு பாடுபடுவதாக கூறிய அவர், ₹18 கோடி, ₹17 கோடி என சம்பளம் வாங்கும் வீரர்கள் ஒழுங்காக விளையாடாமல், கேப்டனுக்கும் பதில் கூறாமல் இருப்பதாகவும் சாடியுள்ளார். மேலும், இந்த முறை ஏலத்தின் போது வீரர்கள் தேர்வில் தோனி அதிகமாக ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தவறுதலாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமாரை ஒப்படைக்க பாக். ராணுவம் மறுத்து வருகிறது. கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாள்களாகியும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பாக். விடாப்பிடியாக இருந்து வருகிறது. பூர்ணம் குமாரை மீட்க BSF பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பாக். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகவே சிங்கிளாக இருப்பதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சந்தித்தே இருக்காத பெண்களுடன் கூட தன்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவதாகவும், தன்னுடைய முழுக்கவனமும் தற்போது கிரிக்கெட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சச்சின் மகள் சாரா மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோருடன் கில் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் பரவின.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 319 ▶குறள்: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். ▶பொருள்: அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கின் போது அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்தனர். பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில், ரஷ்ய அதிபர் புடினுக்கு போரை நிறுத்த மனமில்லை என சாடியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக புடின் தன்னை ஏமாற்றி வருவதாகவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனிய பொது இடங்களில் குண்டு வீசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்ற பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தர தேவையில்லை என J&K முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாதான் இத்தாக்குதலை நடத்தியதாக கூறியவர்கள் அவர்கள் எனவும், தற்போது சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறினால், அது நமது எதிரிகளுக்கு வெற்றியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஃபினிஷிங் ரோலில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து தோனியிடம் அடிக்கடி பேசுவதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். நிதானமாக இருந்து, போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாட தோனி அறிவுறுத்துவார் எனவும், நிதானமாக விளையாடினாலே எல்லாம் இயற்கையாக சரியாகிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஐபிஎல்லில் 14 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால் ஃபிட்னஸில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
▶ ஏப்ரல் 27 – சித்திரை- 14 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: அமாவாசை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை
மகாராஷ்டிராவில் 24 வயதான இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரில், ஆக.10 – ஏப்.23-க்குள் ஐ.டி. ஊழியர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ, போட்டோ எடுத்து ₹2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது அந்தரங்க போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.