India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் 5-க்கும், மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்றார். இந்நிலை இனியும் தொடராமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 257/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, பூரன்-75, பவல்-52, ரூதர்போர்டு-47* ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஆஸி., அணி, 222/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக, இங்கிலிஷ்-55 ரன்கள் குவித்தார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையின் மூலம், வியாபாரிகளின் வருமானம் ஸ்தம்பித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் அவர் பேசும்போது, காந்தியை படம் பார்த்து தான் பொதுமக்கள் தெரிந்துகொண்டனர் என்ற மோடியின் கூற்றை கண்டித்த அவர், காந்தியின் மீதுள்ள வன்மத்தையே பிரதமர் காட்டியுள்ளதாக விமர்சித்தார். முல்லை பெரியாற்றில் ஒரு செங்கல்லை கூட கேரளாவால் எடுத்து வைக்க முடியாது என்றார்.
சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த முத்தையா, 50 மில்லி லிட்டரை ₹500 என விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்ப்பாலைக் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று பல பொய்களை அள்ளி வீசி அதிக விலைக்கு அவர் தாய்ப்பாலை விற்றிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தூணிலும், துரும்பிலும் இருப்பார். எனவே, அரசு நிலங்களை நிலமற்ற மக்களுக்குப் பகிர்ந்தளித்தால், கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைவார். அனைவருக்கும் ஆசிர்வாதம் அளிப்பார் என்று தெரிவித்தது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பிரசார முகமாக இருந்தவர் பிரியங்கா காந்தி. நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், 55 நாள்களில் சுமார் 180 பேரணி & கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளார். உ.பி., ம.பி., உட்பட 16 மாநிலங்களில் பாஜகவுக்கு சவால் விடுத்து, 100-க்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினார். மோடியா? லேடியா? என்கிற வகையில் பிரியங்கா சளைக்காமல் அரசியல் சண்டை செய்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இதன் படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிரேமலு’ திரைப்படத்தின் கதாநாயகன் நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளையும், இத்துடன், நாளை மறுநாள் (ஜூன் 2) வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில கன்னூர் விமான நிலையத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் சுரபி நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 28ஆம் தேதி, மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரபியின் ஆசன வாயில் சுமார் ஒரு கிலோ தங்கக் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி முனையில் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, இன்று காலை சூரிய பகவானை வணங்கினார். அதன் ஃபோட்டோக்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. காவி உடையுடுத்தி, ருட்திராட்ச மாலையுடன் சூரியனை வழிபட்ட மோடி, அதன்பின் விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவருக்கு தனியான அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.