India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* திறப்பு நாளன்றே (10.06.2024) நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன
* புதிய பேருந்து பயண அட்டைகள் கிடைக்கும் வரை பழைய அட்டையை பயன்படுத்தலாம் அல்லது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தலாம்
* முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளைத் தொடர்ந்து நாளை (10.06.24) பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
* 2024 – 25 கல்வியாண்டில் 220 நாள்கள் பள்ளி செயல்படும்
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, அங்கிருந்த ஏராளமானோரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. அவர்களில் 4 பேர் காசாவில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியது. பின்னர், அதிரடியாக ஊடுருவி 4 பேரை மீட்டுச் சென்றது. இஸ்ரேல் தாக்குதலில் 210 பாலஸ்தீனர்கள் பலியானதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
திருப்பதி மலையில் உள்ள ஆகாசகங்கையில் அமைந்திருக்கும் குகையில்தான் அனுமன் அவதரித்ததாக ஆஞ்சநேய புராணம் கூறுகிறது. தாய் அஞ்சனா தேவியுடன் கூடிய ஸ்ரீபால ஆஞ்சநேயர் தனிக் கோவில் கொண்டருளும் இந்த திருத்தலத்திற்கு சென்று, வெண்ணை காப்பு செய்து, துளசி மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, செந்தூரத்தால் அர்ச்சித்து, மிளகு வடை படைத்து வழிபட்டால் துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.
நேற்றிரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பலர் ஏறியதாகத் தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த பயணிகள், விருத்தாசலம் அருகே ரயிலை நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்களின் சமாதானத்துக்குப் பின், ரயில் புறப்பட்டுச் சென்றது. அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யாதவர்கள் இறக்கிவிடப்பட்டனர்.
PAK-க்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த போட்டியில், USA அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் கென்சிஜின் பந்துவீச்சில் பாக்., திணறியது. இதன் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், ஒரு ஓவர் மட்டும் வீசிய அக்ஸர் படேலுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15ல் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் ஜூன் 10க்குள் எமிஸ் மூலம் பதிவேற்ற வேண்டும். மறுநாள் கல்வி அலுவலர் அதற்கான ஒப்புதலை வழங்குவார். வருவாய் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வு ஜூன் 14, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூன் 15ல் நடைபெறும்.
பிரதமர் மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் சேர்ந்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஜேடியு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழா 8 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் வரை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாக்கு எண்ணும் நாளன்று ஆரம்பத்தில் INDIA கூட்டணி முன்னிலை வகிப்பது போல் இருந்தது. இதனைப் பார்த்து அதிருப்தியடைந்த சத்தீஸ்கர் பாஜக தொண்டர் துர்கேஷ் பாண்டே (30) அருகிலுள்ள காளி கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டார். பின்னர், மதிய நேரத்தில் NDA கூட்டணி வெற்றி பெற்றவுடன் அதே காளி கோயிலுக்குச் சென்று விரலை வெட்டி காணிக்கையாக்கினார். மருத்துவர்கள் போராடியும் விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை.
நேரு 1947-1964 வரை 3 முறை தொடர்ந்து பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திரா காந்தி, 1966-1977 வரை 2 முறையும், 1980-1984 வரை ஒருமுறையும் பிரதமராக இருந்துள்ளார். அடல் பிகாரி வாஜ்பாய், 1996, 1998, 1999-2004 வரை 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். அதையடுத்து நரேந்திர மோடி 2014 -2024 வரை 2 முறை பிரதமராக இருந்துள்ளார். இன்று தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராகி நேரு சாதனையை சமன் செய்யவுள்ளார்.
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தை குலதேவதை என்றும் அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவேண்டும். ஆறு பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.