India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘ஓல்டு ஒயின் இன் நியூ பாட்டில்’ என்று மோடி அமைச்சரவை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மோடி அமைச்சரவையில் பழைய நபர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த அவர், அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்கு கூட இடம் வழங்கப்படாததை ஏற்க முடியாது என்றார். 12ஆம் வகுப்பு மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும், நீட் தேர்வை தொடரக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் பெற்றுள்ளார். கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். அதிவேகமாக 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில், ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்) முதலிடத்திலும், ஹசரங்கா (இலங்கை) 2ஆவது இடத்திலும் உள்ளார்.
➤ 1899 – அமெரிக்காவில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர்.
➤ 1902 – ஆஸ்ரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
➤1934 – பல்கேரியாவில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
➤2003 – “தமிழர் விடுதலை இயக்கம்” என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
➤ 2016 – அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய பிரச்னையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினார். முன்னதாக, தமிழ்நாட்டுக்கு வரி பகிர்வாக மத்திய அரசு ₹5700 கோடியும், உ.பிக்கு ₹25,069 கோடியும் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, தனது வாரணாசி தொகுதிக்கு 18ஆம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிரதமர் மோடி, அத்தொகுதியில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். கடந்த 2019 பாஜக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
◾விளக்கம்: செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
டி20 உலகக் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்துள்ளார்.
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 52 பந்துகள்
டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) – 50 பந்துகள்
டெவன் ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) – 49 பந்துகள்
டேவிட் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா) – 49 பந்துகள்
விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் 5ஆவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019 (இடைத்தேர்தல்), 2021இல் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பாமகவுக்கு இத்தொகுதியில் தனி செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஜூன் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷிவம் தூபேவிற்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ஷிவம் தூபே இந்திய அணியில் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடி வருவதாக தெரிவித்த அவர், ஷிவம் தூபேவை விட சிறந்த பேட்டிங் டெக்னிக்கைக் கொண்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். இன்று இரவு, இந்திய அணி அமெரிக்காவுடன் மோத உள்ளது.
Sorry, no posts matched your criteria.