India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பானைத் தொழில் செய்வதற்கு மண், வண்டல், களிமண் வெட்டி எடுக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். வட்டாட்சியர் அளவிலேயே எளியே முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி மண் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதேபோல், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் விவசாய பயன்பாட்டிற்கும் மண் எடுக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.
உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. 2025 – 2027ஆம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 6.7%ஆக இருக்கும். தனியார் முதலீட்டுடன் வலுவான பொது முதலீடு உள்ளதால், இந்தியாவை உள்ளடக்கிய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-26 ல் சராசரியாக சுமார் 3%ஆக வளரும். இது 2010-19 ன் சராசரியை விட மிகக் குறைவு என தெரிவித்துள்ளது.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களை தந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 ஆண்டுகாலமாக பெற்ற பயன்களால் தான் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நாம் இருக்கிறோம் எனவும், அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில், அரசின் திட்டங்கள் தொடரும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மிரட்டலாக பந்து வீசி வருகிறது. முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியின் தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர், இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து கடைசி பந்தில் ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்களுக்கு நடையை கட்டினார். அந்த அணி ஒரு ஓவருக்கு 3/2 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார். நாளை (13ஆம் தேதி) தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள, 50ஆவது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை, காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பாப்கார்ன் சிறந்த நொறுக்குத் தீனியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாப்கார்னை வெண்ணெய், உப்பு சேர்க்காமல் வெறுமனே சாப்பிடலாம் என அறிவுறுத்துகின்றனர். மசாலா, எண்ணெய், கேராமல் போன்றவற்றை சேர்க்கும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
பெண்களுக்காக ‘மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்’ என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. குறுகிய காலத்திற்கான இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் ₹1,000 முதல் ₹2,00,000 வரை முதலீடு செய்ய முடியும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகளாகும். கூடுதல் விவரங்களுக்கு தபால் நிலையங்கள், பொதுத்துறை வங்கிகளை அணுகவும்.
சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏழை சிறுமிகளிடம் பணத்தாசை காட்டி, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்த 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் நதியா, ராமசந்திரன், தண்டபாணி, மாய ஒலி ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூ யார்க் மைதானத்தில் இன்று 25ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. A பிரிவில் இடம்பெற்றுள்ள IND, USA அணிகள் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும் USA, 2ஆவது இடத்திலும் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், குமரி, நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, மழையின்போது மரத்தடியின் கீழ் நிற்க வேண்டாம். மேலும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.