India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய வர்த்தகச் செயலாளர் சுனில் பார்த்வால் டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது அவர், கடந்த மே மாதம் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 9.1% அதிகரித்து, ₹3.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இறக்குமதி 7.7% உயர்ந்து ₹5.18 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 7 மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ₹1.98 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். என்டிஏ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் போட்டியிடுவார் என அண்ணாமலை நேற்று கூறிய நிலையில், இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகள் மதுபோதை அல்லது பிற போதையில் உள்ளனரா? என காவல்துறையினர் பரிசோதிப்பதுண்டு. இந்த சோதனையில் சந்தேகம் ஏற்பட்டால், ரத்த பரிசோதனை நடத்தப்படும். இதில் 100 மில்லி ரத்தத்தில் 30 மில்லி கிராம் மது இருப்பது தெரிய வந்தால், வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியும். இதற்கு 1988 மோட்டார் வாகன சட்டம் 185ஆவது பிரிவின் 202ஆவது உட்பிரிவு வகை செய்கிறது.
உணவுப் பொருள்களின் விலை உயர்வால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவு 2.61% ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு பெரும்பகுதி மைனஸ் நிலையில் இருந்த மொத்த விலை பணவீக்கம், கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், குறிப்பிட்ட சில தயாரிப்பு பொருள்களின் விலை அதிகரித்ததே மொத்தவிலை பணவீக்க உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
நியூசி., வீரர் டிம் சவுத்தி T20 WC போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி, 1 மெய்டன் ஓவருடன் 4 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் T20 WCயில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் T20 WCல் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
தமிழத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார். இப்பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் முன்னிலையில்தான் திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்து பார்த்து, உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற நடைமுறை, ஏற்கெனவே பல பள்ளிகளில் அமலில் உள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Hyundai, அயோனிக் 5 என்ற மின்சார கார்களையும் விற்கிறது. இதில் பேட்டரி சார்ஜ் பிரிவில் சில பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் 2024 ஏப்ரல் 30ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 1,744 கார்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக Hyundai தெரிவித்துள்ளது. இக்காரின் எக்ஸ்-ஷோ ரூம் விலை ரூ.46.05 லட்சமாகும்.
நெல்லையில் நேற்று முன்தினம் பட்டியலின இளைஞருக்கும், மாற்று சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சிபிஎம் அலுவலகத்தில் வைத்து சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதி சங்க தலைவர் பந்தல் ராஜா உள்ளிட்ட 25 பேர் CPM அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், தற்போது பந்தல் ராஜா உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1000 திட்டத்தின் இந்த மாதத்திற்கான தவணை காலை 10 மணியளவில் பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் முதல் தற்போது வரை 9 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 10ஆவது தவணை இன்று வரவு வைக்கப்பட்டது. உங்கள் கணக்கில் ₹1000 வந்துவிட்டதா? செக் பண்ணுங்க.
இரட்டை சதமடித்த இசான் கிஷன், அதிரடி வீரர் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ரஞ்சி போட்டியில் விளையாடாததால் ஓரங்கட்டப்பட்டனர். அந்த வரிசையில் கில்லும் சேருகிறாரோ என்ற எண்ணம் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இடையே அரசியல் காணப்படுவதால் பலர் பயிற்சியாளர் பதவியை ஏற்க தயங்குவதாக கூறப்படும் நிலையில், இதுபோல முன்னணி வீரர்கள் ஓரங்கட்டப்படுவது அதை உறுதிபடுத்துவதாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.