India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தானில் உள்ள கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கழுதைகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அவை சுமைகளை தாங்கி செல்ல அத்தியாவசிய விலங்காக அமைந்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1.72% அதிகரித்து 59 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், கழுதைகளின் எண்ணிக்கை வளர்ந்த அளவில், பொருளாதாரம் உயரவில்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என எண் கணித நிபுணர்கள் கூறுகின்றனர். பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 3 உள்ளவர்கள் மனதளவில் மிகவும் கூர்மையானவர்களாவும், கடினமான சூழ்நிலைகளை கூட தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்பவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கின்றனர். சுயமரியாதை கொண்ட இவர்கள், மற்றவர்களின் வேலையில் தலையிட மாட்டார்கள் என்கிறார்கள்.
நேரடியாக பாமகவை ஆதரிப்பதற்காகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார். இடைத்தேர்தல்களை புறக்கணித்து வந்த பாமக, தற்போது போட்டியிடுவதும், அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதும் அவர்களுக்கு இடையேயான புரிந்துணர்வை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது அதிமுக தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் என அவர் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா-கனடா இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. Lauderhill மைதானத்தில் இன்று 33ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் மைதானம் முழுவதும் ஈரப்பதமாக உள்ளது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் வழங்குவதை இன்று முதல் SBI வங்கி நிறுத்தியுள்ளது. Merchant Category Codes (MCC) 9399 மற்றும் 9311 கீழ் வரும் அரசாங்கம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு இது அமலாகியுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம், யாத்ரா எஸ்பிஐ உள்பட 22 வகையான கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் இனிமேல் வழங்கப்படாது என SBI வங்கி அறிவித்துள்ளது.
INDIA கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடித்தளமிட்டதாக, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய அவர், INDIA கூட்டணி இன்னும் வலிமை பெற வேண்டும் என்றார். INDIA கூட்டணியை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கும் ஆற்றல் ஸ்டாலினுக்கு இருப்பதாகவும், INDIA கூட்டணிக்குள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஸ்டாலின்தான் அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இன்று முதல் திங்கள்கிழமை வரை 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. குறிப்பாக, ஜூன் 17இல் பக்ரீத் பண்டிகைக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் திறந்து இருக்குமா? என்று மது பிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனையடுத்து, பள்ளி, கல்லூரி, வங்கி, அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே விடுமுறை, டாஸ்மாக் வழக்கம்போல் திறந்து இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை என நடிகர் வேலராமமூர்த்தி தெரிவித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்று என்பதை மறுக்க முடியாது எனக் கூறிய அவர், இறுதி வரை சீரியல் பரபரப்பாக சென்றதாக தெரிவித்துள்ளார். ஆனால், கடைசி வரை ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்ளாதது தனக்கு அவமானம் என்றார். மறைந்த மாரிமுத்துவின் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்திருந்தார்.
ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் முன்பதிவு செய்த பயணிகள், அதிக கூட்டத்தால் ரயிலை தவறவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 4இல் ஒருவர் இந்தியர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மாநில மாணவர்கள் அதிகளவில் படிப்பதாக அமெரிக்க பல்கலைக்கழக குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவியல், AI, பொறியியல் போன்ற துறைகளில் அதிகளவில் படிப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.