India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான் புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் வென்று எம்எல்ஏ.வாக இருந்தார். அதே நேரத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விதிஷா தொகுதியில் வென்றதால், மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து புத்னி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஃப்கான் – மே.இந்திய தீவுகள் இடையேயான லீக் போட்டி டேரன் சமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மே.இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்துவரும் நிலையில் 4ஆவது ஓவரில் 36 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. அஸ்மத்துல்லா வீசிய இந்த ஓவரில் நிக்கோலஸ் பூரன், 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசினார். அத்துடன், Extrasஇல் 6 ரன்கள் கிடைத்ததால், ஒரே ஓவரில் 36 ரன்கள் குவிக்கப்பட்டது.
ரயில்வே துறை மீது பாஜக அரசு அலட்சியம் காட்டுவதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சராக தான் பதவி வகித்தபோது, ஏராளமான திட்டங்களை கொண்டு வந்ததாகவும், ஆனால் தற்போதைய பாஜக அரசோ ரயில்வே மீது எந்த அக்கறையும் காட்டுவதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். ராஜ்தானிக்கு பிறகு தூரந்தோ ரயில்தான் வேகமானது, அதன் நிலை தற்போது என்னானது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மினி பஸ்கள் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. 1997ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து RTOக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே சயனக் கோலத்தில் ஈசன் காட்சி தரும் திருத்தலம் சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயிலில் மட்டுமே உள்ளது. ஆலகால விஷத்தை அருந்திய மயக்கத்தில் பார்வதி மடியில் ஈசன் தலைசாய்த்து, தேவர்களுக்கு அருள்பாலித்த இத்தலத்திற்கு, 14 பிரதோஷங்களுக்கு விரதமிருந்து சென்று, வில்வ மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, சிவப்பரிசி புட்டு படைத்து வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு ராகுலின் சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரமோத் திவாரி கூறியபோது, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல், சரியான அரசியல் முடிவு எடுத்திருப்பதாகப் பாராட்டினார். வயநாட்டில் பிரியங்கா 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முட்டைகள் ஏற்றிவந்த லாரியும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான முட்டைகள் சாலையில் கொட்டி உடைந்தன. வெள்ளைக் கருவும், மஞ்சள் கருவும் சாலையில் ஆறாக ஓடின. இதனைக் கண்ட மக்கள், உடையாமல் இருந்த முட்டைகளை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் பாமகவுக்கு இந்த கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். அத்துடன், அக்கட்சியின் சார்பில் 100 நிர்வாகிகள் அந்த தொகுதியில் தேர்தல் களப்பணி ஆற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.
+2 அரசியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி பெயர் நீக்கிய விவகாரத்தில், NCERT மீது வழக்கு தொடர இரு ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஆலோசனைக் குழுவில் இருந்த தங்களிடம் இது குறித்து கவுன்சில் கலந்தாலோசிக்கவில்லை என யோகேந்திர யாதவ், சுஹாஸ் ஆகிய இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர். விற்பனைக்கு வந்துள்ள இந்த புத்தகங்களை திரும்பப் பெறவில்லை என்றால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.
*மணிப்பூரில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமித் ஷா
*அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது – ஜெயக்குமார்
*T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு வங்கதேச அணி தகுதி பெற்றது.
*பால் வளத்துறையில் 916 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்து தமிழக அரசு சாதனை
*சீன எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளை 48% ஆக உயர்த்த ஐரோப்பிய யூனியன் முடிவு
Sorry, no posts matched your criteria.