India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN மக்களுக்கு PM மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொருவரின் மெயிலுக்கும் அவரவர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து அனுப்பியுள்ளார். மனிதனுக்கும், இயற்கைக்குமான நெருக்கத்தை காட்டும் பொங்கல், சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி; உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் அடைவதாகவும் கூறியுள்ளார். PM வாழ்த்து உங்களுக்கு வந்ததா?

இன்று நாம் கொண்டாடி வரும் போகி பண்டிகையுடன் ஷட்திலா ஏகாதசியும் சேர்ந்து வந்துள்ளது. போகி அன்று, ஏகாதசி திதி வருவது கூடுதல் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நிகழ்வு அடுத்ததாக 2040-ல் தான் நிகழ்கிறதாம். இன்றைய தினம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், எள், வெல்லம், துணிகள், நெய், உப்பு, செருப்புகளை தானமாக கொடுப்பதும் நன்மைகள் தருமாம். SHARE IT.

கிறிஸ்துமஸின் மறுநாள், AUS-ல் நடக்கும் பாக்ஸிங்டே டெஸ்ட் போலவே, பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் 1960-ல் முதல் 1988 வரை இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணிக்கு எதிராக 1960-ல் AUS, 1961-ல் PAK, 1962-ல் ENG, 1988-ல் WI ஆகிய அணிகள் பொங்கல் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளன. அப்போது, கொண்டாட்ட மனநிலை ஒட்டுமொத்த அரங்கையும் ஆக்கிரமித்திருந்ததாக கூறுகிறார்கள். மறுபடியும் நடக்குமா?

தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று(ஜன.14) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹110 உயர்ந்து ₹13,280-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹880 அதிகரித்து ₹1,06,240-க்கு விற்பனையாகிறது. <<18851994>>சர்வதேச சந்தையில் காலையில்<<>> சற்று குறைந்த தங்கம் தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால் இந்திய சந்தையில் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது.

கடந்த சில நாள்களாக எல்லையில் பாக்., <<18851779>>ட்ரோன்<<>> அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் பாக்., ட்ரோன்களை ஏவுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சீனா, பாக்.,-க்கு போட்டியாக இந்தியா விரைவில் பிரத்யேக ‘ராக்கெட்-ஏவுகணை படை’ ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BJP தங்களின் கொள்கை எதிரி என்பதில் உறுதியாக இருப்பதாக தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி உறுதிப்படுத்தியுள்ளார். திருவெற்றியூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் BJP வளர்வது பெரும் ஆபத்து, அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். முன்னதாக BJP-வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் தவெக, NDA கூட்டணியில் இணையும் என அமைச்சர் TM அன்பரசன் உள்ளிட்டோர் பேசி வந்தனர்.

சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், திமுகவிற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிரந்தர கொரோனா வைரஸ் போல, மத்திய அரசு தாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதை மீறியும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனக் கூறிய அவர், நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளை கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திமுக அரசின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

வண்டி சாவி, போன் என எதையாவது எங்கேயாவது வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் அதிக படைப்பாற்றல் மிக்கவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எப்போதும் மனதில் கற்பனை, கிரியேட்டிவிட்டி, ஐடியாக்கள் ஓடிக் கொண்டிருப்பதால் அவர்களால் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகிறதாம். சின்ன சின்ன விஷயங்களை மறப்பது குறைபாடல்ல, சக்திவாய்ந்த திறன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை ‘திராவிட பொங்கலாக’ கொண்டாட ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, பொங்கல் ‘இந்துக்களின் விழா’ என்றும், பொங்கலில் உள்ள இந்து அடையாளங்களை நீக்க திமுக சதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியது. அதிமுகவும், ‘அரசியல் நாடகம்’ என விமர்சித்த நிலையில், ஸ்டாலினின் அழைப்பு கட்சி தொண்டர்களுக்கானது; பொதுமக்களுக்கானது அல்ல என்று திமுக விளக்கமளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கை மூலம் 54 லட்சம் உண்மையான வாக்காளர்களை ECI தன்னிச்சையாக நீக்கியுள்ளதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவால் உருவாக்கப்பட்ட AI டெக்னாலஜியை பயன்படுத்தி, உயிருடன் இருக்கும் பல வாக்காளர்களை ECI ‘கொலை’ செய்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை பயன்படுத்திய பெண்களின் பெயரையும் நீக்கி அதிகாரதுஸ்பிரயோகம் செய்துள்ளதாக சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.