India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்பின் அவர் பேசுகையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் கல்வி செலவுக்கு ஏற்ப நிதியுதவி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் உயிரிழந்த நிலையில், கவலைக்கிடமான பலர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சென்று சந்தித்தபின் பேசிய சசிகலா, கள்ளச்சாராயம் விற்பனைக்கு காவல்துறையும் உடந்தை என்று வெளியான செய்தி வேதனையளிப்பதாகக் கூறினார். மேலும், தமிழகத்தில் தொடர்ந்து சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் நடைபெறும் நீட் வழக்கு விசாரணைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வில் மோசடி, கருணை மதிப்பெண் அளித்தது உள்ளிட்ட பல மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதேநேரம், இதுபோன்ற பல மனுக்கள் நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதால் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அனைத்தையும் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தியதாக கூறும் மோடி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவை ஏன் தடுக்கவில்லை? என காங்., எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகள் குறித்துப் பேசிய அவர், வினாத்தாள் கசிவால் மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளதால்தான் நங்கள் சாலையில் இறங்கி போராடுகிறோம் என்றார். மேலும், இந்த வினாத்தாள் கசிவுக்கு யார் பொறுப்பேற்பது என்றும் வினவியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ₹10 லட்சம் நிவாரணத்துக்கான காசோலையையும் வழங்கினார். முதல் கட்டமாக 26 குடும்பத்தினருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என சாடிய அவர், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க, மாவட்ட ஒன்றியங்கள் தோறும் மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
விஷச்சாராய பலிக்கு காரணமானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து, மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என்ற அவர், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமென, மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளதாக கூறிய அவர், இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நிவாரணம் கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரம், குடும்ப தலைமையை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த நிவாரணமும் போதாது என இபிஎஸ் உள்ளிட்டோர் வலியுறுத்துகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Sorry, no posts matched your criteria.