India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, ₹5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ₹3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் தொகை அவர்களுக்கு 18 வயது முடியும் வரை நிலையான வைப்புத் தொகையாக வைக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு அரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. 26ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
நீட் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை காப்பாற்ற திசை திருப்பும் முயற்சி நடைபெறுவதாக பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வினாத்தாள் கசிவது வாடிக்கை என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், தன்னையும், தனது உதவியாளர் பெயரையும் இவ்விவகாரத்தில் இணைத்து பேசுவது யாருக்கும் பயனளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
விஷச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, சிகிச்சை பெறுவோர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். மேலும், குடிக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24இல் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினரை கைது செய்ய வேண்டும் என்ற அவர், இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற அவர், சிகிச்சையில் உள்ளவர்களிடம் ஆறுதல் கூறினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். இது தொடர்பாக ICC வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஒருநாள் மற்றும் T20 உலகக் கோப்பை தொடர்களில், இதுவரை 52 போட்டிகள் விளையாடியுள்ள ஸ்டார்க், 95 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார். 2 மற்றும் 3ஆவது இடங்களில் மலிங்கா, ஷகிப் அல் ஹசன் உள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதி அமலாக உள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி, பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில் 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
விஷச்சாராயத்தை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனியும் மரணங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற கில்கிறிஸ்டின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். 2007இல் 9 கேட்சுகளைப் பிடித்து அதிக கேட்ச் பிடித்த கீப்பர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்திருந்தார். அந்த சாதனையை நேற்றைய ஆஃப்கனுக்கு எதிரான போட்டியில் 3 கேட்சுகளைப் பிடித்ததன் மூலம், ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். அவர் இதுவரை 10 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லையில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.