India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட அளவில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 100 பேர் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில், நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி, நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட துறை சார்ந்த பிரச்னைகளை தீர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
T20 WCல் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக டாஸ் தாமதமான நிலையில், சற்று தாமதமாக டாஸ் போடப்பட்டு இந்திய அணி பேட்டிங் செய்து வந்தது. 8 ஓவரில் இந்தியா 65/2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், 2,92 லட்சம் ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நாளை கேள்வி எழுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடையும் சூழலில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் நாளை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தை திரையரங்குகள், ஓடிடிகளில் வெளியிட தடை கோரி, மஞ்ச வர்மக்கலை தற்காப்பு கலை, ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல் வர்ம கலை முத்திரையை படக்குழுவினர் பயன்படுத்தியதால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, செல்போன் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, ஜியோ நிறுவனம் தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதை தொடர்ந்து, அதன் போட்டியாளரான ஏர்டெல் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வலுவாக இல்லாத நிலையில், தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வு நடவடிக்கை வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆஸ்திரியாவில் 30 ஆண்டுகளாக புகைப்பிடித்து வந்த 52 வயது நபர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், தொண்டையில் 5 செ.மீ அளவிற்கு முடி வளர்ந்தது தெரியவந்தது. ஆண்டுதோறும் முடியை அகற்றிவந்த அவர், புகைப்பதை நிறுத்தியவுடன் முடி வளர்வது முற்றிலும் நின்றுவிட்டது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ரஜினி, குஷ்பு, மனோரமா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, 22 அரங்கில் 100 நாள், 15 அரங்கில் 120 நாள், முதன் முறையாக 9 நாடுகளில் வெள்ளி விழா கண்ட ‘அண்ணாமலை’, அன்றைய ஆளுங்கட்சியின் (அதிமுக) தடைகளை வென்று, தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்ததாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சந்தித்து பேசினார். முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசையை அமித் ஷா கண்டிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருவரும் சந்தித்து பேசியதால், தமிழிசைக்கு ஆளுநர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.