India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தனது கையில் சிவன் புகைப்படத்தை ஏந்தி அவர் பேசினார். இதையடுத்து ராகுலை விமர்சித்து, எக்ஸ் தளத்தில் Shame என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. சிவன் படத்தைப் போல பிற மத கடவுள் படத்தை ராகுல் எடுத்து வந்து காட்டுவாரா என விமர்சிக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில், மூத்த குடிமக்களை, சென்னை தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள அம்மன் கோயில்களுக்கு இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விரும்பமுள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோர் http://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு இன்று காலை கிளம்பியது. அங்கு, ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த அணிக்கு விவிஎஸ்.லக்ஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க இளம் வீரர்களை நம்பி களம் இறங்கும் அணி, வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கியுள்ள ‘இந்தியன் 2’ வருகிற 12ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர், தான் அடுத்ததாக வரலாற்று சிறப்பு மிக்க படம், 2012 என்ற பெயரில் அறிவியல் புனைவு மற்றும் ஜேம்ஸ் பாண்ட் மாதிரியான அதிரடி ஆக்ஷன் படம் உள்ளிட்ட 3 படங்களை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இம்மூன்று படங்களுமே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20-யில் கிடைத்த வெற்றி என்பதால் நாடே கொண்டாடி தீர்த்தது. இந்நிலையில், ரோகித் ஷர்மாவின் தாயார் பூர்ணிமா, ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ‘தோளில் அவன் மகள் இருக்கிறாள். அவன் பின்னால் தேசமே இருக்க, சகோதரன் அருகில் நிற்கிறான்’ என்ற அந்த பதிவு லைக்ஸை குவித்து வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன் என ஓபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காக பாடுபட்ட சம்பந்தனின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.
1956 இந்து தத்தெடுப்பு, பராமரிப்பு சட்டத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. அதில், ஒருவர் இந்து மதத்தினராக இருந்து, அவருக்கு குழந்தை அல்லது பேரக் குழந்தை இருந்தால், இன்னொரு குழந்தையை தத்தெடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தத்தெடுக்க விரும்பும் நபருக்கும், அவர் தத்தெடுக்கும் வாரிசுக்கும் குறைந்தது 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை வரும் 6ஆம் தேதி சந்தித்து பேச உள்ளார். இது தொடர்பாக அவர், ரேவந்த் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலப் பிரிவினையால் எழுந்த பிரச்சனைகள், இரு மாநிலங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஆலோசிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இவர் காங்கிரசில் இணையும் முன்பு, தெதேக.யில் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார்.
பிக் பாஸ் 5ஆவது சீசன் வெற்றியாளர் ராஜு ஜெயமோகன், ‘பன் பட்டர் ஜாம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் இருந்தாலும், இது காதல் கதை அல்ல என இயக்குநர் ராகவ் கூறியுள்ளார். மேலும், புது முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும், இளைய தலைமுறையின் சிக்கல்கள் குறித்து இப்படத்தின் கதை பின்னப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர் கல்விக்காக அண்ணாமலை லண்டன் செல்வதால், அவருக்கு பதில் தமிழிசை தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அவரிடன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அப்படி எதுவும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என ராகுல் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது எனக்கூறிய அவர், தமிழ்நாட்டின் 40 எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.